உதகை நகராட்சி வாகன நிறுத்துமிடம் மீதான ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றக் கோரிக்கை

நீலகிரி : உதகை நகராட்சியில் வாகன நிறுத்துமிடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை உடனடியாக அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி : உதகை நகராட்சியில் வாகன நிறுத்துமிடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை உடனடியாக அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான உதகைக்கு வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து 28 லட்சம் சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் வருகை தருகின்றனர். ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுகிறது. அப்போது சமவெளி பகுதிகளில் வெயில் வாட்டி வதைப்பதால், திரளான சுற்றுலா பயணிகள் சீதோஷ்ண காலநிலையை அனுபவிக்க உதகைக்கு வருகிறார்கள். அவர்கள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் வருகை தருகிறார்கள்.

இந்நிலையில், வாகனங்களை நிறுத்த போதிய வசதி இல்லை. இதனால் கூடலூர் வழியாக உதகைக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் பிங்கர்போஸ்ட் வழியாக காந்தல் பகுதியில் உதகை நகராட்சி சார்பில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டது. அங்கு கட்டணம் செலுத்தாமல் வாகனங்களை நிறுத்த வசதி செய்யப்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உதகையில் இருந்த டாஸ்மாக் குடோனுக்கு மதுபானங்களை கொண்டு வந்த லாரிகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது டாஸ்மாக் குடோன் குன்னூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், அங்கு லாரிகள் நிறுத்தப்படுவது இல்லை.

உதகை நகராட்சி வாகன நிறுத்துமிடத்தைச் சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையே கடந்த சில நாட்களாக வாகன நிறுத்துமிடத்தில் ஆட்டோமொபைல் கடை, வாகனங்களைப் பழுதுபார்க்கும் ஒர்க்ஷாப் மற்றும் தகரத்தால் ஆன ஷெட்டுகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு உள்ளன. இதனால் சுற்றுலா வாகனங்களை அங்கு நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே, நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு உள்ள கடைகள், ஷெட்டுகள், ஒர்க்ஷாப்பை உடனடியாக அப்புறப்படுத்தி சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் நிறுத்துமிடத்தை மீட்டுத் தரவேண்டும் என்று தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்திள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...