கோவை : கோவை ரயில் நிலையம் அருகே பணத்திற்காக இளைஞரை கொலை செய்த வழக்கில் திருநங்கை உட்பட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை : கோவை ரயில் நிலையம் அருகே பணத்திற்காக இளைஞரை கொலை செய்த வழக்கில் திருநங்கை உட்பட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை ரயில் நிலையம் அருகில் லங்கா கார்னர் பாலத்தின் புதர் பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் உடல் கடந்த 15 -ம் தேதி நிர்வாண நிலையில் கிடந்தது. இதையடுத்து, போலீசார் அவரது உடலை சோதனை செய்ததில் இவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் சட்டம்-ஒழுங்கு டாகடர்.பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், உதவி ஆணையாளர் தலைமையில் ஆய்வாளர்கள் ராஜவேல், தேவேந்திரன், ராஜேஷ் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் விரைவாக செயல்பட்டனர்.
இதையடுத்து, தனிப்படையினர் நடத்திய விசாரணையில் இறந்த நபர் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த கார்த்திக் (30), என்பதும் இவர் கூலி வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும், இவருக்கும் திருநங்கையான ஜெனிபர் என்பவருக்கும் தவறான உறவு இருந்ததும் தெரியவந்தது. இந்நிலையில், கார்த்திக் இறந்ததிலிருந்து ஜெனிபர் தலைமறைவாகியிருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த தனிப்படை போலிசார் ஜெனிபரை தீவிரமாக தேடி வந்தனர்.
இதையடுத்து, ஜெனிபரை கைது செய்து போலீசார் விசாரணை செய்ததில், அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கார்திக்கை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், அவர் கொடுத்த தகவலின் பேரில் தேவகோட்டையை சேர்ந்த செந்தில் (25), உக்கடத்தை சேர்ந்த முகமது (36), கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜேஷ் (20), போத்தனூரை சேர்ந்த அன்சார் (26), ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் அவர்களிடம் விசாரணை செய்ததில், இந்த கும்பல் இரவு நேரங்களில் பேருந்து நிறுத்தங்களில் இருக்கும் இளைஞர்களை மயக்கி உல்லாசத்துக்கு அழைத்து பணம் பறிப்பவர்கள் என தெரியவந்துள்ளது. அதேபோல, கொலை செய்யப்பட்ட கார்த்திக், ஜெனிபருடன் உல்லாசமாக இருந்து விட்டு பணம் கொடுக்காததால் அவரை கொலை செய்ததாகவும் குற்றவாளிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
கோவை ரயில் நிலையம் அருகில் லங்கா கார்னர் பாலத்தின் புதர் பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் உடல் கடந்த 15 -ம் தேதி நிர்வாண நிலையில் கிடந்தது. இதையடுத்து, போலீசார் அவரது உடலை சோதனை செய்ததில் இவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் சட்டம்-ஒழுங்கு டாகடர்.பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், உதவி ஆணையாளர் தலைமையில் ஆய்வாளர்கள் ராஜவேல், தேவேந்திரன், ராஜேஷ் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் விரைவாக செயல்பட்டனர்.
இதையடுத்து, தனிப்படையினர் நடத்திய விசாரணையில் இறந்த நபர் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த கார்த்திக் (30), என்பதும் இவர் கூலி வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும், இவருக்கும் திருநங்கையான ஜெனிபர் என்பவருக்கும் தவறான உறவு இருந்ததும் தெரியவந்தது. இந்நிலையில், கார்த்திக் இறந்ததிலிருந்து ஜெனிபர் தலைமறைவாகியிருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த தனிப்படை போலிசார் ஜெனிபரை தீவிரமாக தேடி வந்தனர்.
இதையடுத்து, ஜெனிபரை கைது செய்து போலீசார் விசாரணை செய்ததில், அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கார்திக்கை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், அவர் கொடுத்த தகவலின் பேரில் தேவகோட்டையை சேர்ந்த செந்தில் (25), உக்கடத்தை சேர்ந்த முகமது (36), கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜேஷ் (20), போத்தனூரை சேர்ந்த அன்சார் (26), ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் அவர்களிடம் விசாரணை செய்ததில், இந்த கும்பல் இரவு நேரங்களில் பேருந்து நிறுத்தங்களில் இருக்கும் இளைஞர்களை மயக்கி உல்லாசத்துக்கு அழைத்து பணம் பறிப்பவர்கள் என தெரியவந்துள்ளது. அதேபோல, கொலை செய்யப்பட்ட கார்த்திக், ஜெனிபருடன் உல்லாசமாக இருந்து விட்டு பணம் கொடுக்காததால் அவரை கொலை செய்ததாகவும் குற்றவாளிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.