கோவை : தொண்டாமுத்தூரில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய துணை மின்நிலையத்தினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
கோவை : தொண்டாமுத்தூரில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய துணை மின்நிலையத்தினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம் பேரூர் வட்டம் தொண்டாமுத்தூரில் நேற்று தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் புதிய மின்நிலைய திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு, ரூ.6 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய துணை மின்நிலையத்தினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தொண்டாமுத்தூர் பகுதிக்கு மாதம்பட்டி துணை மின்நிலையத்தில் இருந்து இரண்டு எண்ணிக்கையிலான 11 கிலோவாட் மின் பாதைகளின் மூலமாகவும், தேவராயபுரம் துணை மின்நிலையத்தில் இருந்து இரண்டு எண்ணிக்கையிலான 11 கிலோ வாட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும், மின் தேவை அதிகரித்து வருவதாலும், மின் இழப்பு மற்றும் மின் அழுத்தம் குறைபாடுகளை சீர் செய்யும் நோக்கில், தொண்டாமுத்தூரில் ரூபாய்.6 கோடி மதிப்பீட்டில் புதிய துணை மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், தொண்டாமுத்தூர் மற்றும் தாளியூர் நகரப்பஞ்சாயத்திற்குட்பட்ட கெம்பனூர், முத்திபாளையம், குளத்துப்பாளையம், தீனம்பாளையம், புதுப்பாளையம் கலிக்கநாயக்கன்பாளையம், பூச்சியூர் மற்றும் சுண்டபாளையம் போன்ற கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு சீரான மின் அழுத்தத்தில் மின்சாரம் வழங்கிட இயலும்.
இப்பகுதியில் புதிய துணை மின்நிலையம் அமைப்பதால் ஆண்டுக்கு 31.56 லட்சம் யூனிட்டுகள் மின் இழப்பைக் குறைக்கப்படுவதால் இதன் மூலம் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு தோராயமாக ஆண்டுக்குள் 1.95 கோடி வரை சேகரிக்கப்படும் முடியும், இவ்வாறு அவர் கூறினார்.

கோவை மாவட்டம் பேரூர் வட்டம் தொண்டாமுத்தூரில் நேற்று தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் புதிய மின்நிலைய திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு, ரூ.6 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய துணை மின்நிலையத்தினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தொண்டாமுத்தூர் பகுதிக்கு மாதம்பட்டி துணை மின்நிலையத்தில் இருந்து இரண்டு எண்ணிக்கையிலான 11 கிலோவாட் மின் பாதைகளின் மூலமாகவும், தேவராயபுரம் துணை மின்நிலையத்தில் இருந்து இரண்டு எண்ணிக்கையிலான 11 கிலோ வாட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும், மின் தேவை அதிகரித்து வருவதாலும், மின் இழப்பு மற்றும் மின் அழுத்தம் குறைபாடுகளை சீர் செய்யும் நோக்கில், தொண்டாமுத்தூரில் ரூபாய்.6 கோடி மதிப்பீட்டில் புதிய துணை மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், தொண்டாமுத்தூர் மற்றும் தாளியூர் நகரப்பஞ்சாயத்திற்குட்பட்ட கெம்பனூர், முத்திபாளையம், குளத்துப்பாளையம், தீனம்பாளையம், புதுப்பாளையம் கலிக்கநாயக்கன்பாளையம், பூச்சியூர் மற்றும் சுண்டபாளையம் போன்ற கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு சீரான மின் அழுத்தத்தில் மின்சாரம் வழங்கிட இயலும்.
இப்பகுதியில் புதிய துணை மின்நிலையம் அமைப்பதால் ஆண்டுக்கு 31.56 லட்சம் யூனிட்டுகள் மின் இழப்பைக் குறைக்கப்படுவதால் இதன் மூலம் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு தோராயமாக ஆண்டுக்குள் 1.95 கோடி வரை சேகரிக்கப்படும் முடியும், இவ்வாறு அவர் கூறினார்.