கோவையில் கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை : கிராம மக்கள் பீதி

கோவை : தொண்டாமுத்தூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை, ஆடுகள் மற்றும் கோழிகளை வேட்டையாடிய சம்பவம் கிராம மக்களை பீதியடையச் செய்தது.

கோவை : தொண்டாமுத்தூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை, ஆடுகள் மற்றும் கோழிகளை வேட்டையாடிய சம்பவம் கிராம மக்களை பீதியடையச் செய்தது. 

தொண்டாமுத்தூரையடுத்த பூளுவாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி. இவர், ஆடு மற்றும் கோழி போன்ற கால்நடைகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை அவரது பண்ணைக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, 5 ஆடுகள் மற்றும் கோழிகளை வேட்டையாடிச் சென்றுள்ளது. வழக்கம் போல, பெரியசாமி பண்ணைக்கு சென்ற போது, சிறுத்தை கடித்துக் குதறியதில், அந்தப் பகுதி முழுவதும் ரத்தமாகக் காணப்பட்டது. 

இது குறித்து தகவலறிந்து வந்த மதுக்கரை வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கால்நடைகளை வேட்டையாடிய விலங்கு சிறுத்தை என்பதை உறுதி செய்தனர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பது அக்கிராம மக்களை பீதியடையச் செய்துள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...