நீலகிரி : பந்தலுார் அருகே காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், 24 மணிநேரமும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி : பந்தலுார் அருகே காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், 24 மணிநேரமும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே தேவாலா வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் அத்திமாநகர், அத்திக்குன்னா கிராமங்கள் அமைந்துள்ளன. அதில், அத்திமாநகர் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் முகாமிட்டுள்ளன. பகல் நேரத்தில் சாலையோர புதரில் முகாமிடும் இந்த யானைக் கூட்டங்கள், இரவு 7 மணிக்கு மேல் சாலையை கடந்து எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பை ஒட்டிய நீராதாரங்களில் முகாமிடுகின்றன.

இவை எந்த நேரத்திலும் சாலைக்கு வரலாம் என்பதால், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதால், வனச்சரகர் தலைமையில் வனக்காப்பாளர் மற்றும் யானை கண்காணிப்பு குழுவினர் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். யானைகள் சாலையை கடக்கும் நேரத்தில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, யானைகள் சாலையைக் கடந்த பின்னர் அனுமதிக்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே தேவாலா வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் அத்திமாநகர், அத்திக்குன்னா கிராமங்கள் அமைந்துள்ளன. அதில், அத்திமாநகர் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் முகாமிட்டுள்ளன. பகல் நேரத்தில் சாலையோர புதரில் முகாமிடும் இந்த யானைக் கூட்டங்கள், இரவு 7 மணிக்கு மேல் சாலையை கடந்து எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பை ஒட்டிய நீராதாரங்களில் முகாமிடுகின்றன.

இவை எந்த நேரத்திலும் சாலைக்கு வரலாம் என்பதால், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதால், வனச்சரகர் தலைமையில் வனக்காப்பாளர் மற்றும் யானை கண்காணிப்பு குழுவினர் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். யானைகள் சாலையை கடக்கும் நேரத்தில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, யானைகள் சாலையைக் கடந்த பின்னர் அனுமதிக்கப்படுகிறது.