தைப்பூசத்தை முன்னிட்டு மருதமலையில் வாகனங்கள் செல்லத் தடை

கோவை : தைப்பூசத்தையொட்டி மருதமலையில் வாகனங்கள் ஏறத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவிலைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


கோவை : தைப்பூசத்தையொட்டி மருதமலையில் வாகனங்கள் ஏறத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவிலைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூச தேரோட்ட திருவிழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல, இந்தாண்டு வரும் 21 ம் தேதி (நாளை மறுநாள்) தேரோட்டத்துடன் தைப்பூசத் திருவிழா தொடங்க உள்ளது. இந்த தைப்பூச தேரோட்ட விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் வந்து இறைவனை தரிசனம் செய்து செல்வர். அதேபோல, பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்தும், அலகு குத்தியும் தைப்பூச திருவிழாவை கொண்டாடுவது வழக்கம். 

இப்படி லட்சக்கணக்கான மக்கள் வரும் மருதமலைப் பகுதியில் ஏற்படும் கூட்ட நெரிசலை சரிசெய்ய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் 4 ஆய்வாளர்கள் தலைமையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

அதேபோல, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க மலை மீது இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என எந்த வாகனத்திற்கும் அனுமதி இல்லை. பக்தர்கள் தாங்கள் ஓட்டி வரும் வாகனங்களை மலையடிவாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்தி கொண்டு மருதமலை தேவஸ்தான பேருந்துகளில் கோவிலுக்குள் செல்லலாம்.

இது தொடர்பாக இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,” கடந்த ஆண்டு தைப்பூசத்தின் போது, சுமார் 2 லட்சம் பக்தர்கள் இந்தக் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூட்டத்தை சமாளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், டி.என்.எஸ்.டி.சி. சார்பில் விடப்பட்டுள்ள கூடுதல் பேருந்துகளின் மூலம், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் கோவிலுக்கு எளிதில் வந்தடைய முடியும்,” என்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...