கோவை : வனங்கள் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி கோவையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி இன்று நடைபெற்றது.
கோவை : வனங்கள் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி கோவையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி இன்று நடைபெற்றது.

விலங்குகள் நல அமைப்பு சார்பில் வனங்கள் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி நாடு முழுவதும் 50 இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி நடைபெற்றது. இதில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவர்கள், பணிக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வருமான வரித்துறை அலுவலகம் எதிரில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியில், மாணவர்கள், வனங்களின் பாதுகாப்பை உணர்த்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக் கொண்டு சென்றனர்.

"தற்போது உள்ள வனங்களின் பரப்பளவு, அடுத்த 10 ஆண்டுகளில் இருக்குமா என்று கூறமுடியாது. நமது மற்றும் நமது வாரிசுகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வனங்களைப் பாதுகாக்க வேண்டும்," என்றார் விலங்குகள் நல அமைப்பின் திட்ட மேலாளர் அல்போன்ஷா சேவியர்.
இந்த விழிப்புணர்வு பேரணியைத் தொடர்ந்து, தன்னார்வலர்கள் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.