திருப்பூர் : கோடநாடு சம்பவங்களை அம்பலப்படுத்தியது எதிர்க்கட்சிகள் அல்ல என்றும், அரசியல் சாராத தெஹல்கா நிறுவனம் என்பதால், உண்மையை வெளிக்கொண்டுவர சி.பி.ஐ. விசாரணை தேவை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
திருப்பூர் : கோடநாடு சம்பவங்களை அம்பலப்படுத்தியது எதிர்க்கட்சிகள் அல்ல என்றும், அரசியல் சாராத தெஹல்கா நிறுவனம் என்பதால், உண்மையை வெளிக்கொண்டுவர சி.பி.ஐ. விசாரணை தேவை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
நவம்பர் 19-ம் தேதி தியாகிகள் தினம் நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகளால் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, திருப்பூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
இந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தோற்கடித்து, மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைப்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் யுக்தியாகும்.
கோடநாடு விவகாரத்தில் நடைபெற்ற சம்பவங்கள் ஹாலிவுட் பட திரில்லர் போல நடைபெற்றுள்ளதை விசாரிக்க காவல் புலனாய்வுத்துறை விசாரணை போதாது. மத்திய புலனாய்வுத்துறை, சி.பி.ஐ., விசாரணை தேவை.
சி.பி.ஐ., நீதிமன்றங்களைப் பா.ஜ.க. மோடி அரசு தன் வசப்படுத்த முயற்சிக்கும் போதும் கூட, சி.பி.ஐ.,யால் உண்மை நிலையைக் கொண்டுவர முடியும் என்பதால் அந்த கோரிக்கையினை முன்வைக்கிறேன்.
விசாரணை முடியும் வரை முதலமைச்சர் பொறுப்பில் இருந்து விலகியிருக்க வேண்டும். கோடநாடு விவகாரத்தில் சம்பவங்களை அம்பலப்படுத்தியது கம்யூனிஸ்ட் கட்சிகளோ, எதிர்கட்சிகளோ அல்ல. எந்த அமைப்பையும் சாரதா தெஹல்கா என்னும் பத்திரிக்கை நிறுவனம் என்பதால், அதன் உண்மை நிலையைக் கொண்டுவர எதிர்கட்சிகள் கோரிக்கை வைக்கிறேன்," என்றார்.
நவம்பர் 19-ம் தேதி தியாகிகள் தினம் நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகளால் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, திருப்பூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
இந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தோற்கடித்து, மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைப்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் யுக்தியாகும்.
கோடநாடு விவகாரத்தில் நடைபெற்ற சம்பவங்கள் ஹாலிவுட் பட திரில்லர் போல நடைபெற்றுள்ளதை விசாரிக்க காவல் புலனாய்வுத்துறை விசாரணை போதாது. மத்திய புலனாய்வுத்துறை, சி.பி.ஐ., விசாரணை தேவை.
சி.பி.ஐ., நீதிமன்றங்களைப் பா.ஜ.க. மோடி அரசு தன் வசப்படுத்த முயற்சிக்கும் போதும் கூட, சி.பி.ஐ.,யால் உண்மை நிலையைக் கொண்டுவர முடியும் என்பதால் அந்த கோரிக்கையினை முன்வைக்கிறேன்.
விசாரணை முடியும் வரை முதலமைச்சர் பொறுப்பில் இருந்து விலகியிருக்க வேண்டும். கோடநாடு விவகாரத்தில் சம்பவங்களை அம்பலப்படுத்தியது கம்யூனிஸ்ட் கட்சிகளோ, எதிர்கட்சிகளோ அல்ல. எந்த அமைப்பையும் சாரதா தெஹல்கா என்னும் பத்திரிக்கை நிறுவனம் என்பதால், அதன் உண்மை நிலையைக் கொண்டுவர எதிர்கட்சிகள் கோரிக்கை வைக்கிறேன்," என்றார்.