கோவை : கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமை சங்கத்தினர் கோரிக்கையின் படி, பிரிக்கால் நிறுவனத்தினை மூடப் போவதாக வெளியான தகவலையடுத்து, கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் நல சங்கத்தினர் தொழிலாளர் துணை ஆணையரிடம் மனு அளித்தனர்.
கோவை : கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமை சங்கத்தினர் கோரிக்கையின் படி, பிரிக்கால் நிறுவனத்தினை மூடப் போவதாக வெளியான தகவலையடுத்து, கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் நல சங்கத்தினர் தொழிலாளர் துணை ஆணையரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஏ.ஐ.டி.யு.சி உடன் இணைந்த பிரிக்கால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் சுமார் 800 -க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கத்தின் மாற்றுச் சங்கமாக, கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமை சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இந்த சங்கத்திற்கு எதிராக, கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் நல சங்கத்தினர் மனு ஒன்றினை தொழிலாளர் துணை ஆணையரிடம் அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது ;- கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமை சங்கம், தொழிலாளர்கள் மத்தியில் தவறான செய்திகளைப் பரப்பி வருகிறது. அதனால், சுமார் 1500 ஒப்பந்த தொழிலாளர்கள், 800 யூனிட் தொழிலாளர்கள், 133 நிரந்தர தொழிலாளர்கள் பணியிழந்துள்ளனர். தற்போது 302 தொழிலாளர்களை இடமாற்றம் செய்வது குறித்து, தொழிலாளர் துணை ஆணையர் வழியாக மாவட்ட ஆட்சி தலைவர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக அறிகிறோம்.
302 தொழிலாளர்கள் பிரச்சினை உள்ளிட்ட அமைத்து பிரச்சினைகளையும் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து கொள்வதே எங்கள் விருப்பம். இந்நிலையில், கடந்த 8 -ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் பிரிக்கால் நிறுவனத்திற்கு தண்ணீர் மற்றும் மின்சாரத்தைத் தடை செய்ய போவதாகவும், பிரிக்கால் நிறுவனத்திற்கு சீல் வைக்கப் போவதாகவும் முடிவெடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது.
மேலும், மாவட்ட ஆட்சியரும், தாங்களும் (தொழிலாளர் துணை ஆணையர்) இணைந்து பிரச்சினைகளை பேசி தீர்க்காமல், தொழிற்சாலையை மூடுவதாகத் தெரிவித்திருப்பது, சுமார் 4000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். எனவே, மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம், எனச் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.