கோவை : புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 1,000-க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
கோவை : புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 1,000-க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
புதிய ஓய்வூதிய திட்டமான சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும், பள்ளிக் கல்வி துறையையும், தொடக்கக் கல்வி துறையும் இணைக்கக் கூடாது மற்றும் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி பள்ளிகளுக்குப் பணியிட மாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று மாலை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் தொடக்கக் கல்வி, பள்ளிக் கல்வி ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
புதிய ஓய்வூதிய திட்டமான சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும், பள்ளிக் கல்வி துறையையும், தொடக்கக் கல்வி துறையும் இணைக்கக் கூடாது மற்றும் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி பள்ளிகளுக்குப் பணியிட மாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று மாலை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் தொடக்கக் கல்வி, பள்ளிக் கல்வி ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.