கோவை : கோவையில் கல்யாண் ஜூவல்லர்ஸ் கடைக்கு சொந்தமான காரை மடக்கி நகை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 2 பேரை 6 நாட்கள் போலீஸ் காவல் வைக்க கோவை 7-வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை : கோவையில் கல்யாண் ஜூவல்லர்ஸ் கடைக்கு சொந்தமான காரை மடக்கி நகை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 2 பேரை 6 நாட்கள் போலீஸ் காவல் வைக்க கோவை 7-வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 7-ம் தேதி கல்யாண் ஜூவல்லர்ஸின் ஊழியர்கள் திருச்சூரில் இருந்து கோவை காந்திபுரத்தில் உள்ள கிளைக்கு சுமார் 350 சவரன் தங்க நகையும், 243.320 கிராம் வெள்ளி பொருட்களையும் கொண்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது, காக்கா சாவடி அருகே திடீரென கல்யாண் ஜுவல்லரி பணியாளர்கள் வந்த காரை 10-க்கும் மேற்பட்டோருடன் வந்த கும்பல் கடத்திச் சென்றது. பின்னர், காருக்குள் இருந்த தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை எடுத்துக் கொண்டு காரை கோவையிலேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் கோவை மாவட்ட போலீசார், 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த சூழலில், கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 60 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி ஆபரணங்களை நேற்று திருப்பதி குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாய், மகனை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், தமிழ்ச்செல்வன் ஆகிய இரண்டு பேர் சென்னையில் சரணடைந்தனர். அவர்களை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க க.க.சாவடி போலீசார், கோவை 7-வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாண்டி, ஜெயப்பிரகாஷ் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரையும் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.
கடந்த 7-ம் தேதி கல்யாண் ஜூவல்லர்ஸின் ஊழியர்கள் திருச்சூரில் இருந்து கோவை காந்திபுரத்தில் உள்ள கிளைக்கு சுமார் 350 சவரன் தங்க நகையும், 243.320 கிராம் வெள்ளி பொருட்களையும் கொண்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது, காக்கா சாவடி அருகே திடீரென கல்யாண் ஜுவல்லரி பணியாளர்கள் வந்த காரை 10-க்கும் மேற்பட்டோருடன் வந்த கும்பல் கடத்திச் சென்றது. பின்னர், காருக்குள் இருந்த தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை எடுத்துக் கொண்டு காரை கோவையிலேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் கோவை மாவட்ட போலீசார், 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த சூழலில், கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 60 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி ஆபரணங்களை நேற்று திருப்பதி குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாய், மகனை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், தமிழ்ச்செல்வன் ஆகிய இரண்டு பேர் சென்னையில் சரணடைந்தனர். அவர்களை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க க.க.சாவடி போலீசார், கோவை 7-வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாண்டி, ஜெயப்பிரகாஷ் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரையும் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.