கோவை : வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்திற்கு 5 விமானங்களை இயக்க சிங்கப்பூர் விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கோவை : வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்திற்கு 5 விமானங்களை இயக்க சிங்கப்பூர் விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தற்போது, கோவை - சிங்கப்பூர் இடையிலான விமான சேவையை சில்க் ஏர் நிறுவனம் வழங்கி வருகிறது. இதற்கு பதிலாக, விமான சேவைகளை விரைந்து வழங்கும் வகையில், வரும் அக்டோபர் மாதம் முதல் குறைந்த கட்டணத்தைக் கொண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சேவைகளை வழங்க முன்வந்துள்ளது.
இந்தியாவில் தங்களது சேவையை விரிவுபடுத்துவது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கோவை, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் அக்டோபர் 27-ம் தேதி முதல் சிங்கப்பூருக்கு விமான சேவை வழங்கப்பட இருக்கிறது. அதேவேளையில், திருவனந்தபுரத்தில் இருந்து மே மாதம் முதல் விமான சேவை தொடங்குகிறது.
இந்த சேவையின் மூலம், அம்ர்தரஷ், பெங்களூரூ, சென்னை, ஐதராபாத், சென்னை, கொச்சி, லக்னோ மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் இயக்கப்படுகிறது.
இந்த புதிய சேவையின் அறிமுக ஆஃபராக, கோவை, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் உள்பட நாடு முழுவதும் உள்ள நகரங்களில் இயக்கப்படும் தங்களது விமானங்களின், குறுகிய கால டிக்கெட் சலுகையை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சலுகை 14-ம் முதல் 28-ம் தேதி வரை மட்டுமே.
ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட 27 நாடுகளின் நகரங்களுக்கான ஒருவழி பயணத்திற்கு மட்டும் அனைத்து வரிகளையும் உள்ளடக்கி, வெறும் ரூ. 4,500 மட்டுமே கட்டணம் என அறிவிக்கப்படுகிறது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, கோவை - சிங்கப்பூர் இடையிலான விமான சேவையை சில்க் ஏர் நிறுவனம் வழங்கி வருகிறது. இதற்கு பதிலாக, விமான சேவைகளை விரைந்து வழங்கும் வகையில், வரும் அக்டோபர் மாதம் முதல் குறைந்த கட்டணத்தைக் கொண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சேவைகளை வழங்க முன்வந்துள்ளது.
இந்தியாவில் தங்களது சேவையை விரிவுபடுத்துவது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கோவை, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் அக்டோபர் 27-ம் தேதி முதல் சிங்கப்பூருக்கு விமான சேவை வழங்கப்பட இருக்கிறது. அதேவேளையில், திருவனந்தபுரத்தில் இருந்து மே மாதம் முதல் விமான சேவை தொடங்குகிறது.
இந்த சேவையின் மூலம், அம்ர்தரஷ், பெங்களூரூ, சென்னை, ஐதராபாத், சென்னை, கொச்சி, லக்னோ மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் இயக்கப்படுகிறது.
இந்த புதிய சேவையின் அறிமுக ஆஃபராக, கோவை, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் உள்பட நாடு முழுவதும் உள்ள நகரங்களில் இயக்கப்படும் தங்களது விமானங்களின், குறுகிய கால டிக்கெட் சலுகையை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சலுகை 14-ம் முதல் 28-ம் தேதி வரை மட்டுமே.
ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட 27 நாடுகளின் நகரங்களுக்கான ஒருவழி பயணத்திற்கு மட்டும் அனைத்து வரிகளையும் உள்ளடக்கி, வெறும் ரூ. 4,500 மட்டுமே கட்டணம் என அறிவிக்கப்படுகிறது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.