தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி புரியும் அரசு ஊழியர்களை, தேர்தலை முன்னிட்டு இடமாற்றம் செய்ய தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி புரியும் அரசு ஊழியர்களை, தேர்தலை முன்னிட்டு இடமாற்றம் செய்ய தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்றம் மற்றும் 4 மாநிலங்களுக்குச் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது :- அதில் ஜூன் 3 -ம் தேதிக்குள் மக்களவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். ஆகையால், தேர்தலில் தோடர்புடைய அதிகாரிகள் சொந்த மாவட்டங்களில் பணிபுரிந்தால் வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும். அதே போல், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அதிகாரிகளையும் மே 31 -ம் தேதிக்குள் 3 ஆண்டு பணி நிறைவடையும் அதிகாரிகளையும் இடமாற்றம் செய்ய வேண்டும்.
இந்த உத்தரவு தேர்தல் பணியுடன் நேரடி தொடர்புள்ள மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், ஐஜி, உதவி ஆய்வாளர் உள்ளிட்டோருக்குப் பொருந்தும். தேர்தல் பணியுடன் நேரடி தொடர்பு இல்லாத மருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்குப் பொருந்தாது. இதன் மூலம், அதிகாரிகளைப் பணியிடம் மாற்றம் செய்யும் நடவடிக்கைகளை வரும் பிப்ரவரி 28 -ம் தேதிக்குள் முடித்து மார்ச் முதல் வாரத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும், இவ்வாறு அந்த கடிதத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.