நீலகிரி : உதகை சுற்றுவட்டார பகுதிகளில் பகல் நேரங்களில் அதிகபட்சமாக 18 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 6 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில், அதிகாலை பணிக்கு செல்லும் ஏராளமான கூலி தொழிலாளர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
நீலகிரி : உதகை சுற்றுவட்டார பகுதிகளில் பகல் நேரங்களில் அதிகபட்சமாக 18 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 6 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில், அதிகாலை பணிக்கு செல்லும் ஏராளமான கூலி தொழிலாளர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனி தாக்கம் அதிகளவில் காணப்படும். இந்த சமயங்களில், தேயிலை செடிகள், புல்வெளிகள், செடி, கொடிகள் கருகும். மேலும், கடும் குளிர் நிலவி, வெப்பநிலை நான்கு டிகிரிக்கும் குறைவாகச் செல்லும் வாய்ப்பு அதிகம்.
இந்நிலையில், இந்தாண்டு உறை பனியின் தாக்கம் ஜனவரி 1 -ம் தேதி முதல் சற்று அதிகமாகக் காணப்பட்டது. உதகை, குன்னூர், கேத்தி பள்ளத்தாக்கு, குந்தா, பூங்கா, பந்தைய மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் உறைபனி நிலவுகிறது. மேலும், பனியின் தாக்கத்தால் தேயிலை தோட்டங்கள், விளைநிலங்கள், புல்வெளிகள் போன்றவை வெள்ளைக் கம்பளம் விரித்தது போல் காணப்பட்டது.
மேலும், தற்போது உதகையில் பகல் நேரங்களில் அதிக பட்சமாக18 டிகிரி செல்சியசும், குறைந்த பட்சமாக 6 டிகிரி செல்சியசும் வெப்ப நிலை காணப்படுகிறது. இதனால், அதிகாலை நேரத்தில் கேரட் அறுவடையில் ஈடுபடும் ஏராளமான கூலி தொழிலாளர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தற்போது, 9 மணிக்கு மேல் மட்டுமே தொழிலாளர்கள் கேரட் அறுவடைக்குச் செல்கின்றனர். வழக்கத்துக்கு அதிகமாக கடும் குளிர் நிலவுவதால், வாகன ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் பகல் நேரத்திலேயே நெருப்பூட்டி குளிர்காய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனி தாக்கம் அதிகளவில் காணப்படும். இந்த சமயங்களில், தேயிலை செடிகள், புல்வெளிகள், செடி, கொடிகள் கருகும். மேலும், கடும் குளிர் நிலவி, வெப்பநிலை நான்கு டிகிரிக்கும் குறைவாகச் செல்லும் வாய்ப்பு அதிகம்.
இந்நிலையில், இந்தாண்டு உறை பனியின் தாக்கம் ஜனவரி 1 -ம் தேதி முதல் சற்று அதிகமாகக் காணப்பட்டது. உதகை, குன்னூர், கேத்தி பள்ளத்தாக்கு, குந்தா, பூங்கா, பந்தைய மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் உறைபனி நிலவுகிறது. மேலும், பனியின் தாக்கத்தால் தேயிலை தோட்டங்கள், விளைநிலங்கள், புல்வெளிகள் போன்றவை வெள்ளைக் கம்பளம் விரித்தது போல் காணப்பட்டது.
மேலும், தற்போது உதகையில் பகல் நேரங்களில் அதிக பட்சமாக18 டிகிரி செல்சியசும், குறைந்த பட்சமாக 6 டிகிரி செல்சியசும் வெப்ப நிலை காணப்படுகிறது. இதனால், அதிகாலை நேரத்தில் கேரட் அறுவடையில் ஈடுபடும் ஏராளமான கூலி தொழிலாளர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தற்போது, 9 மணிக்கு மேல் மட்டுமே தொழிலாளர்கள் கேரட் அறுவடைக்குச் செல்கின்றனர். வழக்கத்துக்கு அதிகமாக கடும் குளிர் நிலவுவதால், வாகன ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் பகல் நேரத்திலேயே நெருப்பூட்டி குளிர்காய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.