பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார் எச்.ஐ.வி., ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் கர்ப்பிணி
சாத்தூர் அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி., ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த 24 வயது நிரம்பிய கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எச்.ஐ.,வி., பாதித்த ரத்தம் செலுத்தப்பட்டது. இந்த விவகாரம் மாநில அளவில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவருக்கு இன்று மதுரை ராஜாஜி மருத்துவமனையில், சுகப்பிரசவமாக பெண் குழந்தை பிறந்திருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே, இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அனைவரது மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பெண்ணின் குடும்பத்தினர், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும், எச்.ஐ.வி ரத்தம் கொடுத்த இளைஞர் குற்றவுணர்ச்சியில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.