கோவை : சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் பொங்கல் விடுமுறையை கொண்டாடும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊட்டி சென்றுள்ளனர்.
கோவை : சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் பொங்கல் விடுமுறையை கொண்டாடும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊட்டி சென்றுள்ளனர்.

இந்தநிலையில் இன்று காணும் பொங்கல் கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு ஊட்டியிலிருந்து சென்னை சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த மினி வேன் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கோத்தகிரி முதல் கொண்டை ஊசி வளைவில் வளையும் பொழுது எதிர்பாராதவிதமாக சுவற்றின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
இதையடுத்து சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைவாக வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பேருந்துக்குள் காயங்களுடன் இருந்த சுற்றுலா பயணிகளை, தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் மீட்டனர்.

பின்னர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில் படுகாயமடைந்த சசிகுமார் 31, சுபா 24, குமார் 22, ப்ரீத்தி 18, அம்மு 40, கவிதா 34, தட்சிணாமூர்த்தி 21, அபிநயா 14, அருள்குமார் 42, டிராவிட் 18, தனுஷ் 15, ஜோதிகா 16, ரவி 51, சரளா 40, ராஜா 48, ரவி 47, சங்கீதா 36, ஸ்ரீலதா 19, ஆகியோரை நான்கு 108 ஆம்புலன்ஸ்களில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

இங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொங்கல் கொண்டாட்டத்திற்காக சுற்றுலா பயணிகள் வந்த வாகனம் விபத்துக்குள்ளானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.