கோவை : பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் விஸ்வாசம் படத்தைப் பார்த்த காவல்துறை அதிகாரி ஒருவர் வியந்து பாராட்டியுள்ளார்.
கோவை : பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் விஸ்வாசம் படத்தைப் பார்த்த காவல்துறை அதிகாரி ஒருவர் வியந்து பாராட்டியுள்ளார்.
சிவா இயக்கத்தில் அஜித் 4-வது முறையாக நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம், கடந்த ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வந்தது. குடும்ப உறவுகளின் அவசியத்தைப் பேசும் விஸ்வாசம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
இந்த நிலையில், படத்தைப் பார்த்த சென்னை காவல் துணை ஆணையர் சரவணன், படத்தை வியந்து பாராட்டியுள்ளார். படம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “சமீபத்தில் வெளியான நடிகர் அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் கதை, பாடல், நடிப்பு, சண்டைக்காட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்கு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
படத்தில் கதாநாயகன், கதாநாயகி இருவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்து செல்வது, கதாநாயகன் கார் ஒட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது. தனது மகளின் உயிரைக் காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட, சீட் பெல்ட் அணிந்து செல்வது, பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது.
இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயிரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பல லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட அஜித்குமார் போன்ற நடிகர்கள், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி நடிக்கும் போது, அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது ஆசை. விஸ்வாசம் படத்தின் கதாநாயகன் அஜீத்குமார் மற்றும் இயக்குநர் சிவா மற்றம் அவரது குழுவினருக்கு பாராட்டுகள், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சிவா இயக்கத்தில் அஜித் 4-வது முறையாக நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம், கடந்த ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வந்தது. குடும்ப உறவுகளின் அவசியத்தைப் பேசும் விஸ்வாசம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
இந்த நிலையில், படத்தைப் பார்த்த சென்னை காவல் துணை ஆணையர் சரவணன், படத்தை வியந்து பாராட்டியுள்ளார். படம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “சமீபத்தில் வெளியான நடிகர் அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் கதை, பாடல், நடிப்பு, சண்டைக்காட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்கு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
படத்தில் கதாநாயகன், கதாநாயகி இருவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்து செல்வது, கதாநாயகன் கார் ஒட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது. தனது மகளின் உயிரைக் காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட, சீட் பெல்ட் அணிந்து செல்வது, பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது.
இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயிரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பல லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட அஜித்குமார் போன்ற நடிகர்கள், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி நடிக்கும் போது, அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது ஆசை. விஸ்வாசம் படத்தின் கதாநாயகன் அஜீத்குமார் மற்றும் இயக்குநர் சிவா மற்றம் அவரது குழுவினருக்கு பாராட்டுகள், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.