கோவை: தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ்- அப் குழுக்களை உருவாக்க தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை: தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ்- அப் குழுக்களை உருவாக்க தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக காவல்நிலையங்களுக்கு அவர் நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ்-அப் குழுக்களை உருவாக்க வேண்டும். அந்தக் குழுக்களின் அட்மின் ஆக, அந்தந்த காவல்நிலையத்தின் ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளர் இருக்கலாம். அதில், காவல்நிலையங்களின் வரம்புக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறும் போலீஸாரின் பாராட்டத்தக்க நடவடிக்கைகளை புகைப்படம் மற்றும் நடவடிக்கை குறித்த சிறு குறிப்புடன் பதிவிடலாம்.

காவல்நிலையங்களில் உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குழுக்கள், அவற்றின் அட்மின், குழுவில் உள்ள போலீஸார் ஆகியவை குறித்த விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வெள்ளிக்கிழமை (ஜன.18) காலை 10 மணிக்குள் அனுப்ப வேண்டும், இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக காவல்நிலையங்களுக்கு அவர் நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ்-அப் குழுக்களை உருவாக்க வேண்டும். அந்தக் குழுக்களின் அட்மின் ஆக, அந்தந்த காவல்நிலையத்தின் ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளர் இருக்கலாம். அதில், காவல்நிலையங்களின் வரம்புக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறும் போலீஸாரின் பாராட்டத்தக்க நடவடிக்கைகளை புகைப்படம் மற்றும் நடவடிக்கை குறித்த சிறு குறிப்புடன் பதிவிடலாம்.

காவல்நிலையங்களில் உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குழுக்கள், அவற்றின் அட்மின், குழுவில் உள்ள போலீஸார் ஆகியவை குறித்த விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வெள்ளிக்கிழமை (ஜன.18) காலை 10 மணிக்குள் அனுப்ப வேண்டும், இவ்வாறு அதில் கூறியுள்ளார்.