நீலகிரி : குன்னூர் அருகே உள்ள டால்பின்நோஸ் காட்சி முனை பகுதியில் கிணற்றில் விழுந்த சிறுத்தை குட்டி, வனத்துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டது.
நீலகிரி : குன்னூர் அருகே உள்ள டால்பின்நோஸ் காட்சி முனை பகுதியில் கிணற்றில் விழுந்த சிறுத்தை குட்டி, வனத்துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டது.

குன்னூர் அருகே உள்ள டால்பின்நோஸ் காட்சி முனை பகுதியில் சிறுத்தை, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் காணப்படுகின்றன. இந்த நிலையில், இங்குள்ள முத்திரி எஸ்டேட்டில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் சிறுத்தை குட்டி ஒன்று தவறி விழுந்து, உயிருக்காக தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட எஸ்டேட் ஊழியர், வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில், குன்னூர் வனச்சரகர் பெரியசாமி தலைமையில் இப்பகுதிக்கு வந்த வனத்துறையினர், சுமார் 2 மணிநேர போராட்டத்திற்குப் பின் சிறுத்தை குட்டியை உயிருடன் மீட்டு அருகில் இருந்த வனப்பகுதியில் விட்டனர். குட்டியை தேடி தாய் சிறுத்தை வர வாய்ப்பிருப்பதால், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

குன்னூர் அருகே உள்ள டால்பின்நோஸ் காட்சி முனை பகுதியில் சிறுத்தை, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் காணப்படுகின்றன. இந்த நிலையில், இங்குள்ள முத்திரி எஸ்டேட்டில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் சிறுத்தை குட்டி ஒன்று தவறி விழுந்து, உயிருக்காக தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட எஸ்டேட் ஊழியர், வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில், குன்னூர் வனச்சரகர் பெரியசாமி தலைமையில் இப்பகுதிக்கு வந்த வனத்துறையினர், சுமார் 2 மணிநேர போராட்டத்திற்குப் பின் சிறுத்தை குட்டியை உயிருடன் மீட்டு அருகில் இருந்த வனப்பகுதியில் விட்டனர். குட்டியை தேடி தாய் சிறுத்தை வர வாய்ப்பிருப்பதால், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.