நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரை ஒட்டிய கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 10 வயது பெண் புலி கூண்டில் சிக்கியது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரை ஒட்டிய கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 10 வயது பெண் புலி கூண்டில் சிக்கியது.
நீலகிரி மாவட்டம் 55 சதவீத வனப்பகுதிகளை கொண்டது. இங்கு புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் உள்ள விலங்குகள் அவ்வப்போது, உணவு தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி, குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் உலா வருவது வழக்கம்.
கடந்த சில வாரங்களாக கூடலூரை ஒட்டியுள்ள கேரள மாநில வயநாடு மாவட்டம் பத்தேரி, தேட்டமூலா பகுதி குடியிருப்பு பகுதிகளுக்குள் புலி ஒன்று புகுந்து, பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக வனத்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புலியைப் பிடிப்பதற்காக அப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூண்டு வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தக் கூண்டில் புலி சிக்கியது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் நிம்மதியடைந்தனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது :- பொருத்தப்பட்ட கூண்டில் 10 வயது மதிக்கத்தக்க பெண்புலி சிக்கியுள்ளது. இதனை பரிசோதித்த பின் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.
நீலகிரி மாவட்டம் 55 சதவீத வனப்பகுதிகளை கொண்டது. இங்கு புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் உள்ள விலங்குகள் அவ்வப்போது, உணவு தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி, குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் உலா வருவது வழக்கம்.
கடந்த சில வாரங்களாக கூடலூரை ஒட்டியுள்ள கேரள மாநில வயநாடு மாவட்டம் பத்தேரி, தேட்டமூலா பகுதி குடியிருப்பு பகுதிகளுக்குள் புலி ஒன்று புகுந்து, பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக வனத்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புலியைப் பிடிப்பதற்காக அப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூண்டு வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தக் கூண்டில் புலி சிக்கியது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் நிம்மதியடைந்தனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது :- பொருத்தப்பட்ட கூண்டில் 10 வயது மதிக்கத்தக்க பெண்புலி சிக்கியுள்ளது. இதனை பரிசோதித்த பின் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.