நீலகிரி : தேயிலை பயிர்களின் கொழுந்துகள் உறைபனியால் கருகுவதைத் தடுக்கும் வகையில், தேயிலை செடிகள் மீது எடை குறைவான தாகைகளை விரித்து விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.
நீலகிரி : தேயிலை பயிர்களின் கொழுந்துகள் உறைபனியால் கருகுவதைத் தடுக்கும் வகையில், தேயிலை செடிகள் மீது எடை குறைவான தாகைகளை விரித்து விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடுமையான உறைபனி தொடர்ந்து நிலவி வருவதால், தேயிலை செடிகளின் கொழுந்துகள் கருகி தேயிலை விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, குன்னூர் அருகேயுள்ள கேத்தி, பாலடா, காட்டேரி வில்லேஜ், கொல்லிமலை, கரும்பாலம், கிளிஞ்சடா, தூதூர்மட்டம் சேலாஸ் உள்ளிட்ட பகுதியில் உறைபனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.
பகலில் கடும் வெயிலும், மாலை முதல் குளிர் காற்றும், அதிகாலையில் கடுமையான பனிப்பொழிவு என சீதோசன மாறியுள்ளதால், பொதுமக்கள் மட்டுமில்லாது விவசாயிகளும் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால், உறைபனியில் இருந்து தேயிலை தோட்டப் பயிர்களை பாதுகாக்கும் வகையில், எடை குறைவான தாகைகளை செடியின் மீது பரப்பி விட்டு, தேயிலை செடிகளை பாதுகாத்து வருகின்றனர். வரும் நாட்களில் உறைபனி பொழிவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தேயிலை செடிகள் அதிகளவில் கருகி, அதன் மகசூலும் வெகுவாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் பாதித்து வரும் தேயிலை விவசாயிகளுக்கு, இந்த சீதோஷன நிலை மாற்றத்தால் தேயிலை செடிகள் கருகி வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.