போத்தனூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ விபத்து : ஏராளமான பொருட்கள் எரிந்து நாசம்

கோவை : போத்தனூர் அருகே உள்ள பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், உள்ளே ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின.


கோவை : போத்தனூர் அருகே உள்ள பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், உள்ளே ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின.

கோவை மாவட்டம் போத்தனூர் அருகே குருசாமி பிள்ளை வீதியில் உள்ள குமரன் நகரில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை சின்னதுரை என்பவர் வாடகைக்கு எடுத்து, பிளாஸ்டிக் மற்றும் அலுமனிய பொருட்கள் விற்பனை செய்யும் குடோனை அமைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், இன்று காலை சுமார் 7 மணியளவில் குடோன் திடீரென தீப்பற்றி எரிந்தது. குடோனில் இருந்த கரும்புகை வெளியேறியதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், தீயை அணைக்க முற்பட்டனர். இருப்பினும், முயற்சி பலனளிக்காததால், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். 

இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த வந்த தெற்கு தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர். மேலும், குடோனுக்கு அருகே அமைந்திருந்த வீட்டிலும் தீ பரவியது. இதனால், வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இது குறித்த தகவல் அறிந்த போத்தனூர் காவல்துறையினர், தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா..? அல்லது வேறு ஏதாவது காரணமா..? என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர். குடியிருப்புகள் உள்ள பகுதியில் திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...