கோவை சாடிவயல் யானைகள் முகாமில் யானை பொங்கல் கொண்டாட்டம்

கோவை : கோவை வனச்சரகத்திற்குட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் யானை பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

கோவை : கோவை வனச்சரகத்திற்குட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் யானை பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. 



தமிழகம் முழுவதும் தைப் பொங்கல், உழவர் திருநாள் பண்டிகை களைகட்டி வருகிறது. இதன் ஒருபகுதியாக, கோவை வனக் கோட்டத்திற்குட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் யானை பொங்கல் தலைமை வனப்பாதுகாவலர் தீபக் ஸ்ரீவத்ஸா தலைமையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கும்கி யானை பொம்மன், பாகன்களால் அலங்கரிக்கப்பட்டு, கரும்பு, வெல்லம், பொங்கல் மற்றும் பல்வேறு பழ வகைகளை உண்பதற்கு கொடுத்தனர். மதநீர் சுரந்ததன் காரணமாக, கும்கி ஜான் இந்த யானை பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

மாவட்ட வனஅதிகாரி டி. வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் பழனிராஜா, செந்தில் ஆகியோர் இந்த யானை பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...