கோவை : கோவை வனச்சரகத்திற்குட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் யானை பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
கோவை : கோவை வனச்சரகத்திற்குட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் யானை பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

தமிழகம் முழுவதும் தைப் பொங்கல், உழவர் திருநாள் பண்டிகை களைகட்டி வருகிறது. இதன் ஒருபகுதியாக, கோவை வனக் கோட்டத்திற்குட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் யானை பொங்கல் தலைமை வனப்பாதுகாவலர் தீபக் ஸ்ரீவத்ஸா தலைமையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கும்கி யானை பொம்மன், பாகன்களால் அலங்கரிக்கப்பட்டு, கரும்பு, வெல்லம், பொங்கல் மற்றும் பல்வேறு பழ வகைகளை உண்பதற்கு கொடுத்தனர். மதநீர் சுரந்ததன் காரணமாக, கும்கி ஜான் இந்த யானை பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
மாவட்ட வனஅதிகாரி டி. வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் பழனிராஜா, செந்தில் ஆகியோர் இந்த யானை பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் தைப் பொங்கல், உழவர் திருநாள் பண்டிகை களைகட்டி வருகிறது. இதன் ஒருபகுதியாக, கோவை வனக் கோட்டத்திற்குட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் யானை பொங்கல் தலைமை வனப்பாதுகாவலர் தீபக் ஸ்ரீவத்ஸா தலைமையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கும்கி யானை பொம்மன், பாகன்களால் அலங்கரிக்கப்பட்டு, கரும்பு, வெல்லம், பொங்கல் மற்றும் பல்வேறு பழ வகைகளை உண்பதற்கு கொடுத்தனர். மதநீர் சுரந்ததன் காரணமாக, கும்கி ஜான் இந்த யானை பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
மாவட்ட வனஅதிகாரி டி. வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் பழனிராஜா, செந்தில் ஆகியோர் இந்த யானை பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.