நீலகிரி : மஞ்சூர் அருகே உள்ள கைகாட்டிப் பகுதியில் காட்டெருமை தாக்கியதில் தனியார் நிறுவன ஊழியர் படுகாயம் அடைந்தார்.
நீலகிரி : மஞ்சூர் அருகே உள்ள கைகாட்டிப் பகுதியில் காட்டெருமை தாக்கியதில் தனியார் நிறுவன ஊழியர் படுகாயம் அடைந்தார்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் வசித்து வருபவர் ரெஜினிஸ் வயது (40). இவர் வேலை நிமித்தமாக குன்னூர் வந்து, பின்னர் மீண்டும் மஞ்சூர் சென்று கொண்டிருந்தார். அப்போது கைகாட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்த சமயத்தில் தேயிலைச் செடி மறைவில் இருந்த காட்டெருமை ரெஜினிஸை பலமாகத் தாக்கியுள்ளது.
இதில், பலத்த காயமடைந்த ரெஜினிஸ் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டுள்ளனர். இதையடுத்து, அவர் அருகே உள்ள சாம்ராஜ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்க முடியாத சூழலின் காரணமாக, உதகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள், இங்கு சுற்றித்திரியும் ஒற்றைக் காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் துரத்தவேண்டும், என கோரிக்கை விடுத்தனர்.