கோவை : பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தவும், குழந்தைகள் திருமணத்தை தடுக்கவும் யுனிசெப்புடன் இணைந்து பணியாற்ற சமுதாய ரேடியோ ரத்தினவானி தேர்வாகியுள்ளது.
கோவை : பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தவும், குழந்தைகள் திருமணத்தை தடுக்கவும் யுனிசெப்புடன் இணைந்து பணியாற்ற சமுதாய ரேடியோ ரத்தினவானி தேர்வாகியுள்ளது.
இந்தியா முழுவதும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்), பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தவும், குழந்தைகள் திருமணத்தை தடுக்கவும் 16 சமுதாய வானொலிகளை (கம்யூனிட்டி ரேடியோ) தேர்ந்தெடுத்துள்ளது. சமூகத்தின் நலனுக்காக பாடுபடும் சமுதாய ரேடியோக்களை அதன் அர்ப்பணிப்பையும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் பொறுத்து தேர்ந்தெடுக்கின்றனர்.
அதில், முதல் முறையாகக் கோவையை சேர்ந்த ரத்தினம் நிறுவன குழுமத்தின் சமுதாய ரேடியோ ரத்தினவானி 90.8 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரத்தினவானி ரேடியோவின் தலைவர் முகேஷ் மோகன் குமார் கூறும் போது, அனைத்துச் சமுதாய ரேடியோ தலைவர்களுக்கும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாகாராஷ்டிராவில் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி வரும் பிப்ரவரி மாதம் 7 மற்றும் 8 -ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
அந்த பயிற்சி பட்டறையில், குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் வகையிலான மெட்டீரியல்ஸ், குழந்தை திருமணத்தை ஒழிக்கும் முறைகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. இதையடுத்து, இந்த பிரச்சினைகள் தொடர்பாக நிகழ்ச்சிகள் சமுதாய ரேடியோக்களில் கொடுப்பது குறித்தும் கற்று கொடுக்கப்படும் என தெரிகிறது, என்றார்.
இந்தியா முழுவதும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்), பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தவும், குழந்தைகள் திருமணத்தை தடுக்கவும் 16 சமுதாய வானொலிகளை (கம்யூனிட்டி ரேடியோ) தேர்ந்தெடுத்துள்ளது. சமூகத்தின் நலனுக்காக பாடுபடும் சமுதாய ரேடியோக்களை அதன் அர்ப்பணிப்பையும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் பொறுத்து தேர்ந்தெடுக்கின்றனர்.
அதில், முதல் முறையாகக் கோவையை சேர்ந்த ரத்தினம் நிறுவன குழுமத்தின் சமுதாய ரேடியோ ரத்தினவானி 90.8 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரத்தினவானி ரேடியோவின் தலைவர் முகேஷ் மோகன் குமார் கூறும் போது, அனைத்துச் சமுதாய ரேடியோ தலைவர்களுக்கும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாகாராஷ்டிராவில் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி வரும் பிப்ரவரி மாதம் 7 மற்றும் 8 -ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
அந்த பயிற்சி பட்டறையில், குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் வகையிலான மெட்டீரியல்ஸ், குழந்தை திருமணத்தை ஒழிக்கும் முறைகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. இதையடுத்து, இந்த பிரச்சினைகள் தொடர்பாக நிகழ்ச்சிகள் சமுதாய ரேடியோக்களில் கொடுப்பது குறித்தும் கற்று கொடுக்கப்படும் என தெரிகிறது, என்றார்.