பேட்ட திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாட சமத்துவ பொங்கல் வைத்த திருப்பூர் ரஜினி ரசிகர்கள்

திருப்பூர் : பேட்ட திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடி ரசிகர்கள் மகிழ்ந்தனர்.


திருப்பூர் : பேட்ட திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடி ரசிகர்கள் மகிழ்ந்தனர். 



திருப்பூர் ஈஸ்வரன் கோவில் பகுதியில் ரஜினி மக்கள் மன்றம் அமைந்துள்ளது. இதன் சார்பில் ரஜினியின் 69 -வது பிறந்தநாளை நாளை முன்னிட்டும் பேட்ட படத்தின் வெற்றியை முன்னிட்டும் அனைத்து மதத்தினரும் பங்கேற்கும் வகையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் 69 பெண்கள் கலந்துகொண்டு 69 பானைகளில் பொங்கலிட்டனர். 



இந்த பொங்கல் விழாவினை, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்ரமணியம் தொடங்கி வைத்தார். இதையடுத்து, பேசிய அவர், ரஜினியின் பேட்ட திரைப்படம் சிறந்த வெற்றி பெற்றுள்ளது. பாட்ஷா திரைப்படத்திற்குப் பிறகு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று உலகம் முழுவதும் நல்ல வசூல் சாதனை படைத்துள்ளது, என்றார். 



இந்த விழாவில், பொங்கல் வைப்பதற்குத் தேவையான பாத்திரங்கள், கரும்பு உள்ளிட்ட பொருட்களை ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் இலவசமாக வழங்கினர். அதேபோல, திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியிலும், மும்மதத்தினரும் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வீதியில் கோலமிட்டும் பொங்கல் வைத்தும் சமத்துவ பொங்கல் கொண்டாடினர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...