நீலகிரி : குன்னூர் அருகே உள்ள சுற்றுலாத்தலமான கரன்சி பகுதியில் இன்று காலை ராட்சத மரம் ஒன்று விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி : குன்னூர் அருகே உள்ள சுற்றுலாத்தலமான கரன்சி பகுதியில் இன்று காலை ராட்சத மரம் ஒன்று விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் டால்பின் நோஸ், வேம்ஸ்ராக் உள்ளிட்ட பல சுற்றுலாத் தலங்களும் அடங்கு. இன்று இங்கு செல்லும் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் காணப்படும் நிலையில், இன்று காலை முதல் இந்த சுற்றுலா தலங்களுக்கு செல்லும் முக்கிய சாலையான கரன்சி சாலையில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
இதனால், சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. இதையடுத்து, மரம் அகற்றியபின் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.