கோவையில் ரூ.13 லட்சம் மோசடி செய்த விடுதி பெண் காப்பாளர் கைது : 2 பேருக்கு வலைவீச்சு

கோவை : ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த புகாரில் அரசு விடுதியின் பெண் காப்பாளர் கைது செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கோவை : ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த புகாரில் அரசு விடுதியின் பெண் காப்பாளர் கைது செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். 

கோவை, ராமநாதபுரம் சுப்பிரமணிய தேவர் வீதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிறார். இவரது உறவினர் சூலூர் கலைமகள் நகரைச் சேர்ந்த கருப்பசாமி. இவர் அங்குள்ள விமானப்படையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி. 

சின்ன தடாகத்தில் உள்ள அரசு விடுதியில் காப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கருப்பசாமியும், ராஜேஸ்வரியும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜமாணிக்கத்திடம் கடனாக ரூ.13 லட்சம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் பணத்தைத் திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர்.இதனால், ராஜமாணிக்கம் கருப்பசாமியின் வீட்டுக்கே சென்று பணத்தைத் திருப்பி தருமாறு கேட்டுள்ளார். 

இதையடுத்து, ராஜேஸ்வரி தனது தம்பி சசிக்குமாருடன் சேர்ந்து அவரை தகாத வார்த்தையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ராஜமாணிக்கம் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மூவரின் மீதும் வழக்குப்பதிவு செய்த சூலூர் போலீசார், ராஜேஸ்வரியை கைது செய்து கோவை மத்திய சிறையிலடைத்தனர். தலைமறைவாக உள்ள கருப்பசாமி மற்றும் சசிக்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...