திருப்பூர் : பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்லும் மக்கள் கூட்டம் அதிகமானதால் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
திருப்பூர் : பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்லும் மக்கள் கூட்டம் அதிகமானதால் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
தமிழர்களின் பண்டிகைகளில் மிகவும் சிறப்பு மிக்க பண்டிகையாக திகழ்வது பொங்கல் பண்டிகையாகும். இப்பண்டிகையையொட்டி ஜன.14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் அரசு விடுமுறை. இந்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் திருப்பூரில் பணியாற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களின் ஊர்களுக்கு செல்லத் தொடங்கினர்.
திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, மதுரை, தேனி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், திருச்சி போன்ற பல மாவட்டங்களுக்கு செல்ல பேருந்துகள் உள்ளது. ஆனால் இந்த பொங்கல் பண்டிகையொட்டி, கூடுதலாக பேருந்துகள் இயக்காமல் பழைய நிலையிலே பேருந்துகளை இயக்கியதால் வெளியூர் செல்ல கூடிய பொதுமக்கள் கூட்டம் திரண்டது.
இதனால், பல பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர். எனவே, மக்கள் இது போன்ற முக்கிய பண்டிகை தினங்களில் பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்தனர்.
தமிழர்களின் பண்டிகைகளில் மிகவும் சிறப்பு மிக்க பண்டிகையாக திகழ்வது பொங்கல் பண்டிகையாகும். இப்பண்டிகையையொட்டி ஜன.14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் அரசு விடுமுறை. இந்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் திருப்பூரில் பணியாற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களின் ஊர்களுக்கு செல்லத் தொடங்கினர்.
திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, மதுரை, தேனி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், திருச்சி போன்ற பல மாவட்டங்களுக்கு செல்ல பேருந்துகள் உள்ளது. ஆனால் இந்த பொங்கல் பண்டிகையொட்டி, கூடுதலாக பேருந்துகள் இயக்காமல் பழைய நிலையிலே பேருந்துகளை இயக்கியதால் வெளியூர் செல்ல கூடிய பொதுமக்கள் கூட்டம் திரண்டது.
இதனால், பல பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர். எனவே, மக்கள் இது போன்ற முக்கிய பண்டிகை தினங்களில் பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்தனர்.