குன்னூர் சிவன் கோவிலில் உலா வந்த கரடி : நடைதிறக்கும் முன் மாயம்

நீலகிரி : குன்னூர் அருகே சொகதொரை கிராமத்திலுள்ள சிவன் கோயிலில் நேற்று இரவு கரடி ஒன்று பல மணி நேரம் உலாவந்து சென்றிருப்பது அங்கு உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.


நீலகிரி : குன்னூர் அருகே சொகதொரை கிராமத்திலுள்ள சிவன் கோயிலில் நேற்று இரவு கரடி ஒன்று பல மணி நேரம் உலாவந்து சென்றிருப்பது அங்கு உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. 

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே சொகதொரையில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வர். நேற்றிரவு பூசாரி கோயில் நடையை சாத்தி சென்ற பிறகு, கோயிலுக்குள் நுழைந்த கரடி அப்பகுதியில் சிலமணி நேரம் சுற்றித்திரிந்துள்ளது. அதன் பின்பு, பசியில் பூஜை செய்து வைத்திருந்த பழங்கள் மற்றும் சுண்டல் தேங்காய் உள்ளிட்டவற்றை உண்டுள்ளது. 



இதையடுத்து, இன்று மாலை பூஜைக்காக கோவிலுக்கு வந்த பூசாரி, கோயிலில் இருந்த பூஜை பொருட்கள் கலைந்திருப்பது கண்டு அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துள்ளார். அப்போது சிசிடிவி கேமராவில் கரடி ஒன்று உள்ளே வந்து சாமிக்கு படைக்கப்பட்டிருந்த பொருட்களை உண்டு விட்டு சென்றது தெரிய வந்துள்ளது. 

இதுகுறித்து அவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள இந்தக் கோவிலுக்குள் கரடி ஒன்று வந்திருப்பது அந்த பகுதி மக்களை அச்சம் அடைய வைத்துள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...