உதகையில் போக்குவரத்து விதிமுறைகளை அறிய மின்னணு தகவல் பலகை

நீலகிரி : உதகை வரும் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை மின்னணு தகவல் பலகை சேரிங்கிராஸ் சந்திப்பில் அமைக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி : உதகை வரும் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை மின்னணு தகவல் பலகை சேரிங்கிராஸ் சந்திப்பில் அமைக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தவிர்க்கவும், சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தியும் போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில், குன்னூர் அருகே காட்டேரி சந்திப்பில் சோலார் மூலம் இயங்கும் ஒளிரும் விளக்குகள் சாலையோரம் பொருத்தப்பட்டதும் ஒன்றாகும். 



இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம், கோத்தகிரி மற்றும் குன்னூர் வழியாக உதகை வரும் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மின்னணு தகவல் பலகை உதகை சேரிங்கிராஸ் சந்திப்பில் பொருத்தப்பட்டு உள்ளது. இதில், செல்போனில் சிம் கார்டு போடுவது போல், மின்னணு தகவல் பலகையில் சிம் கார்டு பொருத்தப்பட்டு இருக்கும். அதன் இணைப்பு நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியாவின் கைப்பேசியோடு இணைக்கப்பட்டு உள்ளது.



இதையடுத்து, சீட் பெல்ட் அணிய வேண்டும், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், மிதமான வேகத்தில் செல்ல வேண்டும், உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைக் குறிப்புகள் போலீஸ் சூப்பிரண்டு செல்போனில் இருந்து மின்னணு தகவல் பலகை சிம்கார்டுக்கு அனுப்பப்படும். அந்த சிக்னலை ஏற்றுக்கொண்டு, சாலைப் பாதுகாப்பு தகவல்கள் பலகையில் தெரியும். 

மேலும், உள்ளூர் மற்றும் வெளியூர் வாகன ஓட்டிகள் சேரிங்கிராஸ் போக்குவரத்து சிக்னலில், வாகனங்களை நிறுத்தி சில நொடிகள் நிற்பார்கள். அவர்கள் சிக்னலை கவனிக்கும் போது, அந்த மின்னணு தகவல் பலகையில் போக்குவரத்து விதிமுறைகளைத் தெரிந்துகொள்ளும் வகையிலும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தகவல் வருமாறு அமைக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...