கோவை : கோவை, ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக 50 கேமராக்கள் அமைக்கப்பட்டதற்கான, கட்டுப்பாட்டு அறையைக் கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் இன்று திறந்து வைத்தார்.
கோவை : கோவை, ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக 50 கேமராக்கள் அமைக்கப்பட்டதற்கான, கட்டுப்பாட்டு அறையைக் கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் இன்று திறந்து வைத்தார்.
கோவை மாவட்டத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை, போக்குவரத்து விதிமீறல்கள் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் அரங்கேறுகின்றன. காவல் துறையினர் சார்பில் இதனைத் தடுக்கவும், குற்றவாளிகளை அடையாளப்படுத்திப் பிடிக்கவும் புதியதாகக் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் ஆர்.எஸ் புரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பொது மக்கள் ஆதரவுடன் காவல்துறையினர் பல பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியுள்ளனர்.

இந்த நடவடிக்கையினால் இப்பகுதியில் குற்ற எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேபோல, ஆர்.எஸ் புரம் காவல் எல்லையில் 4 தெருக்கள் கூடும் இடத்தில் எட்டு திசையும் தெரியும் அளவிற்கு நவீன கேமராக்களைப் பொருத்தியுள்ளனர். இந்நிலையில், இன்று ஆர்.எஸ் புரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி அவர்களின் முயற்சியில், காவல்துறை சார்பில் கூடுதலாக, 50 கேமராக்களை பொருத்தியுள்ளனர்.
இதையடுத்து, பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலம் கண்காணிக்க, ஆர்.எஸ் புரத்தில் இருக்கும் மாநகராட்சி சித்த மருத்துவமனை வளாகத்தில் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளனர். இதனை இன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் ஐபிஎஸ் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றித் தொடக்கி வைத்தார். அதேபோலவே, மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளர் டாக்டர்.எல். பாலாஜி சரவணன் இந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் அவர்கள் கூறுகையில், "ஆர்.எஸ் புரம் காவல் நிலைய எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ளது போல அனைத்துக் காவல் நிலைய எல்லைகளிலும் பொது மக்கள் ஆதரவுடன் காவல்துறையினர் கேமராக்களை அமைக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றங்கள் குறைவது மட்டுமன்றி குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து பிடிக்கவும் முடிகிறது. இதற்கு ஆர் எஸ் புரம் காவல் நிலையம் ஒரு முன்மாதிரியாக உள்ளது," என்றார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர்கள் சுஜித் குமார், பெருமாள், செல்வகுமார், ஈஸ்வரன், உதவி ஆணையாளர் வெங்கடேசன், ஆய்வாளர்கள் ஜோதி மற்றும் தேவேந்திரன் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை, போக்குவரத்து விதிமீறல்கள் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் அரங்கேறுகின்றன. காவல் துறையினர் சார்பில் இதனைத் தடுக்கவும், குற்றவாளிகளை அடையாளப்படுத்திப் பிடிக்கவும் புதியதாகக் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் ஆர்.எஸ் புரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பொது மக்கள் ஆதரவுடன் காவல்துறையினர் பல பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியுள்ளனர்.

இந்த நடவடிக்கையினால் இப்பகுதியில் குற்ற எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேபோல, ஆர்.எஸ் புரம் காவல் எல்லையில் 4 தெருக்கள் கூடும் இடத்தில் எட்டு திசையும் தெரியும் அளவிற்கு நவீன கேமராக்களைப் பொருத்தியுள்ளனர். இந்நிலையில், இன்று ஆர்.எஸ் புரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி அவர்களின் முயற்சியில், காவல்துறை சார்பில் கூடுதலாக, 50 கேமராக்களை பொருத்தியுள்ளனர்.
இதையடுத்து, பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலம் கண்காணிக்க, ஆர்.எஸ் புரத்தில் இருக்கும் மாநகராட்சி சித்த மருத்துவமனை வளாகத்தில் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளனர். இதனை இன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் ஐபிஎஸ் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றித் தொடக்கி வைத்தார். அதேபோலவே, மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளர் டாக்டர்.எல். பாலாஜி சரவணன் இந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் அவர்கள் கூறுகையில், "ஆர்.எஸ் புரம் காவல் நிலைய எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ளது போல அனைத்துக் காவல் நிலைய எல்லைகளிலும் பொது மக்கள் ஆதரவுடன் காவல்துறையினர் கேமராக்களை அமைக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றங்கள் குறைவது மட்டுமன்றி குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து பிடிக்கவும் முடிகிறது. இதற்கு ஆர் எஸ் புரம் காவல் நிலையம் ஒரு முன்மாதிரியாக உள்ளது," என்றார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர்கள் சுஜித் குமார், பெருமாள், செல்வகுமார், ஈஸ்வரன், உதவி ஆணையாளர் வெங்கடேசன், ஆய்வாளர்கள் ஜோதி மற்றும் தேவேந்திரன் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.