வெள்ளைக் கம்பளம் விரித்தது போல பொழியும் உறைபனி : நீலகிரி தோட்ட தொழிலாளர்கள் அவதி

நீலகிரி : உதகை சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகரித்ததால் தோட்ட தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

நீலகிரி : உதகை சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகரித்ததால் தோட்ட தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். 

நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனி தாக்கம் அதிகளவில் காணப்படும். டிசம்பரில் உறைபனி பொழிவு அதிகம் இருக்கும். இச்சமயத்தில், கடும் குளிர் நிலவி வெப்பநிலை 4 டிகிரிக்கும் குறைவாகி தேயிலை செடிகள், புல்வெளிகள், செடி, கொடிகள் கருகும் நிலையை அடையும். 



இந்நிலையில், இந்தாண்டு நீர் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இதனால், உறைபனி தாக்கம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு கடந்த 1 -ம் தேதி முதல் உறைபனி தொடங்கி பனியின் தாக்கம் சற்று அதிகமாகக் காணப்பட்டது. இதையடுத்து, உதகை ,குன்னூர், கேத்தி பள்ளத்தாக்கு, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கடும் உறைபனி நிலவுகிறது. மேலும், பனியின் தாக்கத்தால் தேயிலை தோட்டங்கள், விளை நிலங்கள், புல்வெளிகள் போன்றவை வெள்ளைக் கம்பளம் விரித்தது போல் காணப்பட்டது. 

மேலும், அதிகாலை நேரத்தில் மலை காய்கறி பயிரான கேரட் அறுவடையில் பல கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தாண்டு வழக்கத்துக்கு அதிகமாக நிலவும் கடும் குளிரால் தொழிலாளர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். உதகையில் பகல் நேரங்களில் அதிகபட்சமாக 19 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 6 டிகிரி செல்சியசும் வெப்பநிலை காணப்படுகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...