கோவையில் கடை மற்றும் வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபடும் இருவர் கைது

கோவை : பீளமேடு, ஒண்டிபுதூர் போன்ற பகுதிகளில் கடை மற்றும் வீடுகளில் கொள்ளையடித்து வந்த இரண்டு கொள்ளையர்களை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை : பீளமேடு, ஒண்டிபுதூர் போன்ற பகுதிகளில் கடை மற்றும் வீடுகளில் கொள்ளையடித்து வந்த இரண்டு கொள்ளையர்களை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொடர்ந்து பூட்டிய வீடுகளில் மற்றும் கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருந்தது. இதையடுத்து, பீளமேடு குற்றப்பிரிவு ஆய்வாளர் அன்பரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல, கோவை, ஈரோடு, சேலம் போன்ற பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் பழைய குற்றவாளிகள் குறித்து விவரங்களை சேகரித்து கொண்டிருந்தனர். 

இந்நிலையில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கோவை ஆடிஸ் வீதியில் சந்தேகத்திற்கிடமான இரண்டு நபர்களைப் பிடித்தனர். இதில், கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கவேலுவின் மகன் குமார் (எ) ராம்குமார் (34), சென்னையைச் சேர்ந்த தாமோதரனின் மகன் சதீஷ்குமார் (32), ஆகியோரிடம் போலீசார் விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் இவர்கள் ஒண்டிபுதூர் பாலத்திற்கு கீழே உள்ள கடைகளில் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர். 

அதேபோலவே, பீளமேடு பகுதியில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை, ஏ.டி.எம் கார்டு போன்றவற்றைத் திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து 9 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மொத்தமாகப் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தநிலையில், குற்றவாளிகள் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...