திருப்பூர் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனை அதிகரிக்கும் என்றிருந்த நிலையில் ஊத்துக்குளி வெண்ணெய் விற்பனையில் ஏற்பட்ட சரிவால் உற்பத்தியாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
திருப்பூர் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனை அதிகரிக்கும் என்றிருந்த நிலையில் ஊத்துக்குளி வெண்ணெய் விற்பனையில் ஏற்பட்ட சரிவால் உற்பத்தியாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வெண்ணெய் உற்பத்திக்குப் பிரசித்தி பெற்ற இடமாக இருந்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்கள் வெண்ணெய் உற்பத்தி செய்து மும்பை, டெல்லி கொல்கத்தா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வந்தனர். தற்போது வடமாநிலங்களில் வெண்ணெய் உற்பத்தியானது அதிகரித்துள்ள நிலையில், வடமாநிலங்களுக்கான ஏற்றுமதி தடைபட்டுள்ளது.

இதையடுத்து, ஊத்துக்குளியில் இருந்து கேரளாவிற்கு மட்டுமே வெண்ணெய்யானது ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், வடமாநிலங்களில் இருந்து தற்போது குறைந்த விலையில் வெண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதால் ஊத்துக்குளி வெண்ணெய் விற்பனை கடுமையாக சரிவடைந்துள்ளது. இதனால் தங்கள் பணி வாய்ப்பை இழந்து உள்ளதாகவும், ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பின்னர் தங்களது விற்பனையானது மேலும், சரிவடைந்து உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே, 15 கிலோ கொண்ட வெண்ணெய் டின் ஒன்றிற்கு ரூ.700 ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுவதாகவும், பொங்கல் பண்டிகைக்கு விற்பனை அதிகரிக்கும் என்றிருந்த நிலையில் தொடர்ந்து விற்பனையானது மந்தமாகவே உள்ளது. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பண்டிகை காலங்களில் நாள் ஒன்றுக்கு 100 டின்கள் விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது 30 டின்கள் அளவிலேயே விற்பனை உள்ளது. இதனால், குறைந்த அளவில் உற்பத்தி செய்யும் வெண்ணெய் கூட தேக்கமடைகிறது. மேலும், உற்பத்தியானது குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக உற்பத்தியாளர்கள் வேதனைத் தெரிவித்தனர்.

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும் போது, தங்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வந்தது வெண்ணெய் உற்பத்தி. தற்பொழுது விற்பனை மந்தம் அடைந்துள்ளதால், வேலையின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. வாரத்தில் மூன்று நாட்கள் 4 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. வாரம்தோறும் பணி வழங்கப்பட்டாலும் பாதி நேரம் மட்டுமே வேலை பார்க்கவேண்டியுள்ளது. இதனால், ஊதியம் மிகக் குறைந்த அளவே வருவகிறது. பொங்கல் பண்டிகையான இந்த நேரத்தில் வேலை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக வேதனைத் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வெண்ணெய் உற்பத்திக்குப் பிரசித்தி பெற்ற இடமாக இருந்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்கள் வெண்ணெய் உற்பத்தி செய்து மும்பை, டெல்லி கொல்கத்தா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வந்தனர். தற்போது வடமாநிலங்களில் வெண்ணெய் உற்பத்தியானது அதிகரித்துள்ள நிலையில், வடமாநிலங்களுக்கான ஏற்றுமதி தடைபட்டுள்ளது.

இதையடுத்து, ஊத்துக்குளியில் இருந்து கேரளாவிற்கு மட்டுமே வெண்ணெய்யானது ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், வடமாநிலங்களில் இருந்து தற்போது குறைந்த விலையில் வெண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதால் ஊத்துக்குளி வெண்ணெய் விற்பனை கடுமையாக சரிவடைந்துள்ளது. இதனால் தங்கள் பணி வாய்ப்பை இழந்து உள்ளதாகவும், ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பின்னர் தங்களது விற்பனையானது மேலும், சரிவடைந்து உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே, 15 கிலோ கொண்ட வெண்ணெய் டின் ஒன்றிற்கு ரூ.700 ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுவதாகவும், பொங்கல் பண்டிகைக்கு விற்பனை அதிகரிக்கும் என்றிருந்த நிலையில் தொடர்ந்து விற்பனையானது மந்தமாகவே உள்ளது. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பண்டிகை காலங்களில் நாள் ஒன்றுக்கு 100 டின்கள் விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது 30 டின்கள் அளவிலேயே விற்பனை உள்ளது. இதனால், குறைந்த அளவில் உற்பத்தி செய்யும் வெண்ணெய் கூட தேக்கமடைகிறது. மேலும், உற்பத்தியானது குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக உற்பத்தியாளர்கள் வேதனைத் தெரிவித்தனர்.

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும் போது, தங்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வந்தது வெண்ணெய் உற்பத்தி. தற்பொழுது விற்பனை மந்தம் அடைந்துள்ளதால், வேலையின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. வாரத்தில் மூன்று நாட்கள் 4 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. வாரம்தோறும் பணி வழங்கப்பட்டாலும் பாதி நேரம் மட்டுமே வேலை பார்க்கவேண்டியுள்ளது. இதனால், ஊதியம் மிகக் குறைந்த அளவே வருவகிறது. பொங்கல் பண்டிகையான இந்த நேரத்தில் வேலை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக வேதனைத் தெரிவித்தனர்.