சுருளிமூலா கிராமத்திற்கு செல்ல நிரந்தர பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

நீலகிரி : பந்தலுார் அருகே, சுருளிமூலா பழங்குடியின கிராமத்திற்கு செல்லும் மூங்கில் பாலத்திற்கு பதில் நிரந்தர பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி : பந்தலுார் அருகே, சுருளிமூலா பழங்குடியின கிராமத்திற்கு செல்லும் மூங்கில் பாலத்திற்கு பதில் நிரந்தர பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுருளிமூலா பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு செல்ல பாட்டவயல்-கல்பறா-அம்பலமூலா சாலையிலிருந்து பிரிந்து செல்லும் மண் சாலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சாலைக்கு செல்ல அங்குள்ள ஆற்றைக் கடக்க வேண்டும்.

ஆனால், ஆற்றைக் கடக்க நிரந்தர பாலம் இல்லாத நிலையில், தற்காலிக மூங்கில் பாலம் அமைத்து மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, மூங்கில் வெட்ட முடியாத நிலையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட பாலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொங்கு பாலமாக உள்ள இந்த பாலத்தில் தட்டு, தடுமாறி நடந்து செல்லும் நிலை உள்ளது.

இதனால், சிறுவர்கள், வயோதிகர், நிலை தடுமாறி விழும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறுகின்றன. இந்த பாலத்தால் கோடை காலத்தில் பெரிய பிரச்னை இல்லாவிட்டாலும், மழைக் காலங்களில் பாதிப்பு அதிகரிக்கிறது. எனவே, உடைந்து விழும் நிலையில் உள்ள இந்த பாலத்திற்கு பதில் நிரந்தர பாலம் அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...