உதகையில் சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக சனிக்கிழமைதோறும் ஹேப்பி சாலையாக மாறும் வர்த்தக சாலை

நீலகிரி : மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா சேரிங் கிராஸ் முதல் கேசினோ ஜங்சன் வரையுள்ள வர்த்தக சாலையை ஹேப்பி சாலையாக தொடங்கி வைத்ததோடு, பள்ளி மாணவர்களுடன், விளையாடியும் நடனமாடியும் மகிழ்ந்தார்.

நீலகிரி : மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா சேரிங் கிராஸ் முதல் கேசினோ ஜங்சன் வரையுள்ள வர்த்தக சாலையை ஹேப்பி சாலையாக தொடங்கி வைத்ததோடு, பள்ளி மாணவர்களுடன், விளையாடியும் நடனமாடியும் மகிழ்ந்தார்.



நீலகிரிமாவட்டம் சுற்றுலா மாவட்டம் என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை புரிகின்றனர். இன்னும் 2 மாதங்களில் கோடை சீசன் தொடங்கிவிடும். இதையடுத்து, உதகைக்கு லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை புரிய உள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 



இந்நிலையில், சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சேரிங் கிராஸ் முதல் கேசினோ ஜங்சன் வரையுள்ள வர்த்தக சாலை, மாதந்தோறும் சனிக்கிழமைகளில் ஹேப்பி சாலையாக மாற்றப்பட்டு அன்று ஒரு நாள் மட்டும் எவ்வித வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



இந்த ஹேப்பி சாலையில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சிப்படுத்தப் பாண்டி, சதுரங்க விளையாட்டு, கேரம், பல்லாங்குழியாட்டம், வாலிபால் போன்றவற்றை விளையாடி மகிழும் வகையில் சூழல் காவல்துறை சார்பில் உருவாக்கப்பட்டது. இன்று அதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடக்கி வைத்து பள்ளி மாணவர்களுடன் நடனமாடி மகிழ்ந்தார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...