கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 5 -வது சர்வதேச பலூன் திருவிழா வித்தியாசமான ராட்ச பலூன்களுடன் நாளை கோலாகலமாக தொடங்குகிறது.
கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 5 -வது சர்வதேச பலூன் திருவிழா வித்தியாசமான ராட்ச பலூன்களுடன் நாளை கோலாகலமாக தொடங்குகிறது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக, சர்வதேச பலூன் திருவிழா வருடாந்திரம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக சுற்றுலாத்துறையின் வழிகாட்டுதலின் படி, 5 -வது சர்வதேச பலூன் திருவிழா கோவை, பொள்ளாட்சியில் நாளை தொடங்கவிருக்கிறது. குளொபல் மீடியா மற்றும் தி ஸ்லேவ்ஸ் உணவகம் இணைந்து நடத்தும் இந்த ஏர் பலூன் திருவிழா 15 -ம் தேதி நிறைவடைகிறது.

இந்த விழாவின் சிறப்பே அமெரிக்கா, நெதர்லாந்து போலந்து உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் ராட்சத பலூன்களே ஆகும். இந்த ஆண்டு பார்வையாளரை வெகுவாக கவர ஜெர்மனியிலிருந்து ஒயிட் கேட் பலூன், பெல்ஜியத்திலிருந்து ஐஸ் கீரிம் பலூன், அமெரிக்காவிலிருந்து ஆங்கிரி பேர்ட்ஸ் பலூன் போன்ற சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஏர் பலூன்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, தொடக்க நாளான 13 -ம் தேதி சிறப்பு ஏற்பாடாக நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியா ஜெர்மியாவின் இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. இதே திருவிழா, சென்னை செங்கல்பட்டில் உள்ள மகேந்திரா வேர்ல்ட் சிட்டியில் மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.