நீலகிரி : குன்னூர் கரன்சி எஸ்டேட் பகுதியில் உலா வந்து கொண்டிருந்த காட்டெருமை, நிலை தடுமாறி ஆற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.
நீலகிரி : குன்னூர் கரன்சி எஸ்டேட் பகுதியில் உலா வந்து கொண்டிருந்த காட்டெருமை, நிலை தடுமாறி ஆற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.
உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டெருமைகள் அவ்வப்போது சாலைகளில் உலா வருவது வழக்கம். அண்மைக் காலமாக இவை குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து, பொதுமக்களை அச்சுறுத்துவதும், தேயிலைத் தோட்டம் போன்ற பகுதிகளில் பணியாளர்களைத் தாக்கி வருவதும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை குன்னூர் கரன்சி பகுதியில் உள்ள டான் டீ தேயிலை எஸ்டேட் பகுதியில் காட்டெருமை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, அங்கிருந்த ஒத்தையடி பாதையில் நடக்கும் போது, அருகில் இருந்த ஓடையில் கால் தவறி விழுந்தது. இதில், பலத்த காயடைந்த காட்டெருமை, வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டது.
இதனைக் கேட்டு அங்கு குவிந்த பொதுமக்கள், குன்னூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர், காட்டெருமை உயிரிழந்ததை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து, உடலை பிரேத பரிசோதனை செய்து அங்கேயே புதைத்தனர்.