கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்த வீடியோவில் உண்மையில்லை : முதலமைச்சர் விளக்கம்

சென்னை : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உண்மையில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உண்மையில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விவரங்கள் அடங்கிய ஆவணப்படத்தை தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூஸ் டெல்லியில் நேற்று வெளியிட்டார். கோடநாடு எஸ்டேட்டில், 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகை, பணம் இருந்ததாகவும் அந்த ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கொள்ளையில் ஈடுபட்ட ஷயான் என்பவரின் மனைவி, குழந்தை, உட்பட 5 பேர் மர்மமாக உயிரிழந்தனர். இதன்பிறகு ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர், கனகராஜும் விபத்தில் கொல்லப்பட்டார். கோடநாட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கனகராஜ் யாருக்காக இதை செய்தார்..? என்றும், இந்த சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் சாமுவேல் மேத்யூஸ் தனது ஆவணப்படத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆவணப்படத்திற்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் மறுப்பு தெரிவித்து வந்தாலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ”கோடநாடு கொள்ளை தொடர்பாக வெளியான வீடியோவில் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மையில்லை. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மேல் களங்கம் கற்பிக்கும் வகையில், இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்," என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...