கோவை : பொங்கல் விழாவைச் சிறப்பிக்கும் வகையில் ஜனவரி 15 முதல் 17 -ம் தேதி வரை கொடிசியா மைதானத்தில் பல்வேறு வீர விளையாட்டுகள் நடைபெறவுள்ளது.
கோவை : பொங்கல் விழாவைச் சிறப்பிக்கும் வகையில் ஜனவரி 15 முதல் 17 -ம் தேதி வரை கொடிசியா மைதானத்தில் பல்வேறு வீர விளையாட்டுகள் நடைபெறவுள்ளது.
ஆதி தமிழர்களின் வீரம் மற்றும் அவர்களின் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் பல்வேறு விளையாட்டுகளை விட்டு சென்றுள்ளனர். அதனை மீண்டும் நிகழ்த்தும் விதமாக கொடிசியா மைதானத்தில் வைத்து ஜனவரி 15 முதல் 17 -ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. மாலை 4 மணியளவில் தொடங்கும் இவ்விழா 7 மணி வரையிலும் நடைபெறும்.

இந்த மூன்று நாட்களும் 10 -க்கும் மேற்பட்ட வீர விளையாட்டுகள் அரங்கேறவுள்ளன. அதில், சடுகுடு, உறியடித்தல், வழுக்குமரம், இளவட்டக்கல், சிலம்பம், மல்யுத்தம், பம்பரம், கயிறு இழுத்தல், கர்லாசுத்துதல் உள்ளிட்டவை அடங்கும். இவைகள் மட்டும் அல்லாது, கரகாட்டம், ஒயிலாட்டம், பறை, மள்ளர் கம்பம் மற்றும் பலவகையான மெய்சிலிர்க்கும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
மேலும், இந்த சிறப்பு விழாவில் கால்நடை கண்காட்சி, 50 -க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள், கிராமிய உணவு திருவிழா, குழந்தைகள் விளையாட்டு, பெண்கள் விளையாட்டு போட்டிகள், பட்டம் விடுதல், பொருட்காட்சி ஆகியவைகளும் பிரத்யேகமாக நடைபெறவுள்ளன.
ஆதி தமிழர்களின் வீரம் மற்றும் அவர்களின் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் பல்வேறு விளையாட்டுகளை விட்டு சென்றுள்ளனர். அதனை மீண்டும் நிகழ்த்தும் விதமாக கொடிசியா மைதானத்தில் வைத்து ஜனவரி 15 முதல் 17 -ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. மாலை 4 மணியளவில் தொடங்கும் இவ்விழா 7 மணி வரையிலும் நடைபெறும்.

இந்த மூன்று நாட்களும் 10 -க்கும் மேற்பட்ட வீர விளையாட்டுகள் அரங்கேறவுள்ளன. அதில், சடுகுடு, உறியடித்தல், வழுக்குமரம், இளவட்டக்கல், சிலம்பம், மல்யுத்தம், பம்பரம், கயிறு இழுத்தல், கர்லாசுத்துதல் உள்ளிட்டவை அடங்கும். இவைகள் மட்டும் அல்லாது, கரகாட்டம், ஒயிலாட்டம், பறை, மள்ளர் கம்பம் மற்றும் பலவகையான மெய்சிலிர்க்கும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
மேலும், இந்த சிறப்பு விழாவில் கால்நடை கண்காட்சி, 50 -க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள், கிராமிய உணவு திருவிழா, குழந்தைகள் விளையாட்டு, பெண்கள் விளையாட்டு போட்டிகள், பட்டம் விடுதல், பொருட்காட்சி ஆகியவைகளும் பிரத்யேகமாக நடைபெறவுள்ளன.