நீலகிரியில் மது போதைக்கு அடிமையானவர்களை விடுவிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

நீலகிரி : குடிபோதைக்கு அடிமையானவர்களைக் கண்டறிந்து அதிலிருந்து விடுவிக்க, சேவையாற்றும் நீலகிரி தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி : குடிபோதைக்கு அடிமையானவர்களைக் கண்டறிந்து அதிலிருந்து விடுவிக்க, சேவையாற்றும் நீலகிரி தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டம் முழுவதும், 81 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. தங்கள் பகுதியில் இருந்த மதுக்கடை மூடப்பட்டாலும், பல கி.மீ., துாரம் உள்ள மதுக்கடைகளைத் தேடி சென்று மது வகைகளை குடிப்பதால், தினசரி சராசரி விற்பனை வருமானம், 1.50 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 

இதனிடையே, டாஸ்மாக் மதுக்கடை விற்பனை பகல், 12:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை என நேரம் நிர்ணயித்தாலும், காலை முதலே அந்தந்த போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முக்கிய இடங்களில் டாஸ்மாக் சில்லறை விற்பனை விதி மீறலுடன் ஜோராக நடக்கிறது.

இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:- போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை விடுவிக்கும் பொருட்டு, அரசு மருத்துவமனைகள் மூலம் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பழக்கம் உள்ளவர்களை அழைத்து வரும் பட்சத்தில் அங்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கான 'கவுன்சிலிங்' வழங்கப்படுகிறது. இந்நிலையில், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களைக் கண்டறிந்து அதிலிருந்து விடுவிக்கும் பணியில் ஈடுபட விருப்பமுள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...