கோவையில் கேரள அரசிற்கு ஆதரவாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

கோவை : சமூக நீதிக்காக போராடி வரும் கேரளா அரசிற்கு ஆதரவாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை : சமூக நீதிக்காக போராடி வரும் கேரளா அரசிற்கு ஆதரவாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலித்துகள் உள்பட அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கியது, மனித கழிவுகளை அகற்ற இயந்திரங்களை பயன்படுத்தியது உள்ளிட்ட சமூகநீதிக்கான நடவடிக்கைகளில் கேரள அரசு இந்தியாவிற்கே முன்னுதாரணமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இதனால், சங்பரிவாரம் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கேரள அரசிற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதனிடையே, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, சாதிய ரீதியில் இழிவுப்படுத்தும் நடவடிக்கையில் சங்பரிவாரத்தினர் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை வன்மையாகக் கண்டிக்கும் விதமாகவும், சமூகநீதியை நிலை நாட்டி வரும் கேரள அரசுக்கு ஆதரவு தெரிவித்தும், சங்பரிவாரம் அமைப்புகளைக் கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக, கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, கேரள அரசுக்கு ஆதரவாகவும், சங்பரிவாரம் அமைப்புகளுக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பப்பட்டது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...