திருப்பூரில் கலாச்சார உடையணிந்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிய அரசு பள்ளி மாணவர்கள்

திருப்பூர் : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவர்கள் கலாச்சார உடையணிந்து உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

திருப்பூர் : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவர்கள் கலாச்சார உடையணிந்து உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

தமிழர்களின் பண்டிகைகளில் மிகவும் சிறப்புமிக்க பண்டிகையாக திகழ்வது பொங்கல் பண்டிகையாகும். வரும் 15-ம் தேதி தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால், 14-ம் தேதி முதலே அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனையொட்டி, பள்ளி இறுதி வேலைநாளான இன்று திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.

 

இதில், பள்ளி மாணவர்கள் கலாச்சார உடையான வேட்டி சட்டை அணிந்து ஆசிரியர்களோடு சேர்ந்து மாணவர்களும் பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும், பாரம்பரிய விளையாட்டுக்களான உரியடித்தல், கபடி, பூப்பறித்தல், கும்மியாட்டம், ஒயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 



"நகர்ப்புற மாணவர்களிடையே மறைந்து வரும் தமிழர்களின் கலாச்சாரமான பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக, பள்ளிக் கல்வித்துறையிடம் அனுமதி பெற்று, இந்தாண்டு முதல்முறையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதனால், மாணவர்கள் பண்டைய தமிழ் பாரம்பரியத்தை தெரிந்துகொள்வதோடு, மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலாக அமையும்," என பள்ளி தலைமையாசிரியர் கூறினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...