நீலகிரி : கோத்தகிரியில் மரத்தின் மீது ஏறி தூங்கிய குட்டிக் கரடியை கண்டு அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
நீலகிரி : கோத்தகிரியில் மரத்தின் மீது ஏறி தூங்கிய குட்டிக் கரடியை கண்டு அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக, கரடி, காட்டெருமை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதில், பொதுமக்களுக்கு அதிகம் இன்னல்களைக் கொடுக்கக்கூடிய விலங்காக கரடிகளே உள்ளன. தேயிலைத் தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகள் என பொதுமக்கள் வாழும் இடங்களில் அதிகம் நடமாடுவதால், உயிர்பீதி ஏற்படுகிறது.

இந்த நிலையில், கோத்தகிரி அருகே உள்ள எம். கைகாட்டி பகுதியில் குட்டிகளுடன் கரடி ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. இதில், குட்டி கரடி ஒன்று மரத்தின் மேல் ஏறி உறங்கிவிட்டது. இதனால், தாய்கரடி அங்கு சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், வனத்துறைக்கு தகவல் அளித்தனர். ஆனால், சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வருவதற்குள், கரடி தனது குட்டிகளுடன் தேயிலை தோட்டத்திற்குள் சென்று விட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக, கரடி, காட்டெருமை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதில், பொதுமக்களுக்கு அதிகம் இன்னல்களைக் கொடுக்கக்கூடிய விலங்காக கரடிகளே உள்ளன. தேயிலைத் தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகள் என பொதுமக்கள் வாழும் இடங்களில் அதிகம் நடமாடுவதால், உயிர்பீதி ஏற்படுகிறது.

இந்த நிலையில், கோத்தகிரி அருகே உள்ள எம். கைகாட்டி பகுதியில் குட்டிகளுடன் கரடி ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. இதில், குட்டி கரடி ஒன்று மரத்தின் மேல் ஏறி உறங்கிவிட்டது. இதனால், தாய்கரடி அங்கு சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், வனத்துறைக்கு தகவல் அளித்தனர். ஆனால், சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வருவதற்குள், கரடி தனது குட்டிகளுடன் தேயிலை தோட்டத்திற்குள் சென்று விட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.