கோவையில் 11,200 ரூபாய் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் அலுவலர் கைது; லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை

கோவை: கோவை பாப்பம்பட்டி அருகே தொழிலாளர் அலுவலர், ஆய்வு செய்ய சென்ற நிறுவன உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கும் பொழுது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்டதை அடுத்து கைது செய்யப்பட்டார்

கோவை: கோவை பாப்பம்பட்டி அருகே தொழிலாளர் அலுவலர், ஆய்வு செய்ய சென்ற நிறுவன உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கும் பொழுது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்டதை அடுத்து கைது செய்யப்பட்டார்

கோவை பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் பன்னீர் செல்வம் என்பவர் தெய்வம் காளிபிரேஷன் அக்கியூரசி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். பாப்பம்பட்டி, சூலூர் போன்ற பகுதிகளுக்கு ஆய்வு செய்ய போகும் தொழிலாளர் துணை ஆய்வாளர் விஜயலட்சுமி 57, பன்னீர்செல்வம் அலுவலகத்திற்கத்திலும் அடிக்கடி ஆய்வு மேற்கொள்வது வழக்கம். விஜயலட்சுமி ஆய்வு மேற்கொள்ள வரும்பொழுதெல்லாம் பன்னீர்செல்வத்திடம் லஞ்சம் கேட்டு வற்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் ஆய்வு செய்த விஜயலட்சுமி, லஞ்சம் கேட்டு கட்டாயப்படுத்தியதால், ரூ.11,200 பணத்தை தர பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டார். லஞ்சம் தர விருப்பம் இல்லாத பன்னீர்செல்வம், இந்த விவரம் தொடர்பாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.  இந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை பன்னீர்செல்வத்திடம் கொடுத்தனர். அந்த நிறுவனத்திற்கு வந்த தொழிலாளர் துணை அலுவலர் விஜயலட்சுமியிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கிய ரூ.11,200 ரசாயனம் தடவிய பணத்தை  பன்னீர்செல்வம் அளித்துள்ளார். அதை விஜயலட்சுமி வாங்கி வைத்துக் கொண்டார். இதை அங்கு மறைந்து இருந்த கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் வாங்கிய விஜயலட்சுமியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...