நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள அருங்காடு பகுதியில் சுற்றுலா கார் மோதி ஏற்படுத்திய விபத்தில் 4 மாணவ மாணவியர் படுகாயமடைந்தனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள அருங்காடு பகுதியில் சுற்றுலா கார் மோதி ஏற்படுத்திய விபத்தில் 4 மாணவ மாணவியர் படுகாயமடைந்தனர்.
குன்னூர் அருகே உள்ள அருவங்காடு பகுதியில் அமைந்துள்ள டெம்ஸ் பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவியர் மாலை பள்ளி முடிந்தவுடன் அருவங்காடு பகுதியில் சாலையை கடக்க முற்பட்டனர்.
அப்போது அங்கு அதிவேகத்தில் வந்த சுற்றுலா வாகனம் ஒன்று சாலையில் நின்று கொண்டிருந்த ஆர்த்தி(11), கீர்த்திகா(12), அஸ்வதா(12), கௌசிக்(8) ஆகியோர் மீது மோதியதில் பள்ளி மாணவ மாணவியர் படுகாயமடைந்தனர். இதில் இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் படுகாயமடைந்த கௌசிக், மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்த அருவங்காடு காவல் துறையினர் ஈராேட்டைச் சேர்ந்த நந்தகுமார் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனைத் தாெடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற பாெது மக்களை காவல் துறையினர் சமாதானம் செய்ததால் பாேராட்டம் கைவிடப்பட்டது.
குன்னூர் அருகே உள்ள அருவங்காடு பகுதியில் அமைந்துள்ள டெம்ஸ் பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவியர் மாலை பள்ளி முடிந்தவுடன் அருவங்காடு பகுதியில் சாலையை கடக்க முற்பட்டனர்.
அப்போது அங்கு அதிவேகத்தில் வந்த சுற்றுலா வாகனம் ஒன்று சாலையில் நின்று கொண்டிருந்த ஆர்த்தி(11), கீர்த்திகா(12), அஸ்வதா(12), கௌசிக்(8) ஆகியோர் மீது மோதியதில் பள்ளி மாணவ மாணவியர் படுகாயமடைந்தனர். இதில் இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் படுகாயமடைந்த கௌசிக், மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்த அருவங்காடு காவல் துறையினர் ஈராேட்டைச் சேர்ந்த நந்தகுமார் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனைத் தாெடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற பாெது மக்களை காவல் துறையினர் சமாதானம் செய்ததால் பாேராட்டம் கைவிடப்பட்டது.