நீலகிரி : கோத்தகிரி பங்களோரை பகுதியில் தூர்வாரப்படாமல் ஓடை சுருங்கி வருவதால், ஓடையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி : கோத்தகிரி பங்களோரை பகுதியில் தூர்வாரப்படாமல் ஓடை சுருங்கி வருவதால், ஓடையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தகிரி பில்லிக்கம்பை, ஒன்னதலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிக பரப்பளவில் மலை காய்கறி பயிரிடப்படுகிறது. இப்பகுதி விவசாயிகள் பெரும்பாலும் பங்களோரை - குடிமனை இடையே செல்லும் ஓடையை நம்பியே, மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், பீன்ஸ், உருளைக்கிழங்கு மற்றும் கீரை வகைகளைப் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு இப்பகுதியில் அதிக பரப்பளவில் கேரட் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஓடை துார்வாரப்படாமல் உள்ளது. இதனால், செடிகள் மற்றும் புற்கள் முளைத்து, ஓடையின் ஆழம் மற்றும் அகலம் குறைந்துள்ளது. இதனால், ஓடையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
தற்போது, பனிப்பொழிவுடன், பகல் நேரங்களில், கடுமையான வெயில் அடிப்பதால் எதிர்வரும் நாட்களில், தண்ணீர் அளவு மேலும் குறைய வாய்ப்புள்ளது. அத்துடன், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அறுவடை செய்யவுள்ள தோட்டங்களில் மீண்டும் பயிர் செய்வதில் சிக்கல் அதிகரித்துள்ளது.
எனவே, ஓடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் தண்ணீர் பாய்ச்ச அமைக்கப்பட்டுள்ள மோட்டார் செட்டும் பாராமரிக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதேப் போன்று கட்டபெட்டு குடிமனைப் பகுதியில் உள்ள தண்ணீர் இரைக்கும் மோட்டார் பம்ப் செட்டையும் சீரமைக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தகிரி பில்லிக்கம்பை, ஒன்னதலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிக பரப்பளவில் மலை காய்கறி பயிரிடப்படுகிறது. இப்பகுதி விவசாயிகள் பெரும்பாலும் பங்களோரை - குடிமனை இடையே செல்லும் ஓடையை நம்பியே, மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், பீன்ஸ், உருளைக்கிழங்கு மற்றும் கீரை வகைகளைப் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு இப்பகுதியில் அதிக பரப்பளவில் கேரட் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஓடை துார்வாரப்படாமல் உள்ளது. இதனால், செடிகள் மற்றும் புற்கள் முளைத்து, ஓடையின் ஆழம் மற்றும் அகலம் குறைந்துள்ளது. இதனால், ஓடையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
தற்போது, பனிப்பொழிவுடன், பகல் நேரங்களில், கடுமையான வெயில் அடிப்பதால் எதிர்வரும் நாட்களில், தண்ணீர் அளவு மேலும் குறைய வாய்ப்புள்ளது. அத்துடன், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அறுவடை செய்யவுள்ள தோட்டங்களில் மீண்டும் பயிர் செய்வதில் சிக்கல் அதிகரித்துள்ளது.
எனவே, ஓடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் தண்ணீர் பாய்ச்ச அமைக்கப்பட்டுள்ள மோட்டார் செட்டும் பாராமரிக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதேப் போன்று கட்டபெட்டு குடிமனைப் பகுதியில் உள்ள தண்ணீர் இரைக்கும் மோட்டார் பம்ப் செட்டையும் சீரமைக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.