கோவை கோட்டத்திற்கு 140 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார் பொள்ளாச்சி ஜெயராமன்

கோவை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு அரசின் சார்பில் 555 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.


கோவை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு அரசின் சார்பில் 555 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. 

இந்த பேருந்துகளை சென்னையில் கடந்த 7-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதன்படி, இன்று கோவைக்கு வந்தடைந்த பேருந்துகளை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் காந்திபுரம் பகுதியில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



கோவை கோட்டத்திற்கு புதிதாக 140 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் கோவை மண்டலத்திற்கு 42 பேருந்துகளும், ஊட்டி மண்டலத்திற்கு 19 பேருந்துகளும், திருப்பூர் மண்டலத்திற்கு 41 பேருந்துகளும், ஈரோடு மண்டலத்திற்கு 38 பேருந்துகளும் அடங்கும்.



காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன்.அர்ஜூனன், மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ சின்னராஜ், கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ ஆறுகுட்டி, வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அருண்குமார் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நாளை நடைபெறுவதாக இருந்த இந்நிகழ்ச்சி, பொங்கல் பண்டிகைக்கு பேருந்துகள் பற்றாக்குறையை போக்கத் துரிதகதியில் இன்றே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...