கோத்தகிரி தேயிலை தோட்டங்களில் உலாவரும் காட்டெருமைகள் : பணிக்கு செல்ல அஞ்சும் தொழிலாளர்கள்

நீலகிரி : கோத்தகிரி பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் உலா வருவதால் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல அச்சமடைந்து வருகின்றனர்.

நீலகிரி : கோத்தகிரி பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் உலா வருவதால் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல அச்சமடைந்து வருகின்றனர்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில், அவ்வப்போது வனவிலங்குகள் ஊருக்குள் வருவது வாடிக்கை. இதனால், தேயிலை தோட்டங்களிலும், விவசாயம் செய்யும் நிலங்களிலும் சேதம் ஏற்படுகிறது. இந்நிலையில், தற்போது காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளான, மஞ்சூர், குந்தா, தூதர்மட்டம், சேலாஸ் போன்ற பகுதிகளில் உலா வருகிறது. 



இதையடுத்து, வேலைக்கு செல்பவர்கள் வனப்பகுதியில் உள்ள சாலை வழியே பணிக்கு செல்லும் போது வன விலங்குகள் தாக்குதலுக்கு ஆளாவதோடு, சில சமயங்களில் உயிர் சேதமும் ஏற்படுகிறது.இந்நிலையில், குன்னூர், கோத்தகிரி, முக்கிய சாலையின் ஓரத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் கூட்டமாக உலா வரத் தொடங்கியுள்ளன. 

இதனால், தேயிலை தோட்டங்களில் வேலைக்கு செல்ல தொழிலாளர்கள் அச்சமடைந்து வருகின்றனர். அசம்பாவிதங்கள் நடக்கும் முன் வனத்துறையினர் இவற்றை அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் துரத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...